கோட்டாவில் தொடரும் நீட் பயிற்சி மாணவர்கள் தற்கொலை

செவ்வாய், 28 நவம்பர் 2023 (12:39 IST)
ராஜஸ்தான்  மாநிலம் கோட்டாவில் நீட் பயிற்சி மாணவர்கள் தற்கொலை அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்தியாவில் மருத்துவப் படிப்பில் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே பனிரென்டாம் வகுப்பு முடித்த பின், மருத்துவப் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் நீட் தேர்வுக்கான பயிற்சி மையங்களில் சேர்ந்து இதற்கெனப் பிரத்யேகமாகப் படித்து நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று அப்படிப்பில் சேர்ந்து வருகின்றனர்.
 
இந்த நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வு பயம் மற்றும் தோல்வி பயத்தால் மாணவர்கள் தற்கொலை செய்து வருவது அதிகரித்து வரும் நிலையில் நீட் தேர்வுக்கு எதிராக திமுக, அதிமுக, பாமக, விசிக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றன.
 
இந்த நிலையில்,  ராஜஸ்தான்  மாநிலம் கோட்டாவில் நீட் பயிற்சி மாணவர்கள் தற்கொலை செய்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் அசோக் கெலாட் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது.
 
இங்குள்ள கோட்டா மாவட்டத்தில் நீட் தேர்வு பயிற்சி மையத்தில் பயின்று வந்த மேற்கு வங்கத்தைச் சேர்ந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
 
இந்த ஆண்டு அந்த மாவட்டத்தில் நுழைவுத் தேர்வு பயிற்சி மாணவர்கள் தற்கொலை எண்ணிக்கை 28 ஆக உயர்ந்துள்ளது.
 

எல்லாம் காட்டு

சுடுகாட்டில் 3 மாசம் படுத்திருந்தேன்!.. ராதன் பண்டிட் பகீர் பேட்டி....

பாஜகவை எதிர்த்த திமுக!.. என்ன செய்யப்போகிறார் விஜய்?.. தவெக பிளான் என்ன?...

பழனிச்சாமியை விஜய் ஏன் சந்திக்கவில்லை?!.. அமைச்சர் சி.டி நிர்மல் குமார் விளக்கம்..

தவெக அமைச்சரவையில் 2 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்.. 50 வருடங்களுக்கு பின் அமைச்சரவையில் பங்கேற்பு..!

இதுதாண்டா மக்களாட்சி.. நெல் கொள்முதல் விவகாரம்.. பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரின் அதிரடி எச்சரிக்கை - அதிகாரிகளுக்கு கிடுக்கிப்பிடி!

அடுத்த கட்டுரையில்
Show comments