இந்திரா காந்தியைப் போல் நான் கொல்லப்படலாம் – அரவிந்த் கெஜ்ரிவால் அச்சம்!

Updated: சனி, 18 மே 2019 (18:49 IST)
நான் இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி போல எனது பாதுகாவலராலே கொல்லப்படலாம் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லிக்கு மாநில அந்தஸ்து கேட்டு போராடி வருகிறார். டெல்லியில் பாஜக மற்றும் காங்கிரஸ் ஆகியக் கட்சிகளுக்குப் போட்டியாக இருந்து வருகிறார். இரண்டு கட்சிகளையும் சரமாரியாக விமர்சனம் செய்து வருகிறார்.

இந்நிலையில் பஞ்சாப்பில் உள்ள ஒரு ஊடகத்திற்குப் பேட்டியளித்த அவர், ‘இந்திரா காந்தி அவரது பாதுகாவலரால் கொல்லப்பட்டது போன்று என்னையும் பா.ஜனதா என்னுடைய பாதுகாவலரை வைத்து கொலை செய்யலாம். என்னுடைய பாதுகாவலர்களிடம் இருந்து பாஜக தகவல்களைப் பெற்று வருகிறது. பாஜக என்றாவது ஒருநாள் என்னைக் கொல்லலாம்’ எனத் தெரிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

3வது முறையாக ஜனநாயகன் படம் பார்க்கும் விஜய்!.. அப்படி என்ன ஃபீலிங்!..

ஜனநாயகன் இன்று ரிலீஸ்!.. வெறிச்சோடிய தலைமை செயலகம்!...

அழகிரி மகள் கயல்விழி கோரிக்கை விஜய்யால் நிராகரிப்பு.. தவெகவில் சேரும் திட்டம் கேன்சலா?

ரோஹிணி தியேட்டர்ல்ல எதுக்கு நீட் போராட்டம் பண்ணனும்.. திமுகவுக்கு அரசியல் செய்ய வேற எதுவுமே கிடைக்கலையா?

சாதகமான நீதிமன்ற தீர்ப்பு.. 16 ஆண்டுகளுக்கு பின் நாடு திரும்பும் லலித் மோடி...

அடுத்த கட்டுரையில்
Show comments