அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு: பயணிகள் ரயிலுக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

வெள்ளி, 17 ஜூன் 2022 (10:11 IST)
அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு: பயணிகள் ரயிலுக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!
மத்திய அரசு சமீபத்தில் அறிவித்த அக்னிபாத்  என்ற திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டம் நடத்தி வருவது என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் பீகார் மாநிலத்தில் பயணிகள் ரயிலுக்கு தீ வைத்து போராட்டக்காரர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் 
 
பீகார் மாநிலம் பயணிகள் ரயில் சென்று கொண்டிருந்த போது திடீரென அங்கு வந்த இளைஞர்கள் இரண்டு பெட்டிகளுக்கு தீ வைத்தனர். இதனால் அந்த பெட்டிகளில் இருந்த பயணிகள் பதறி அடித்துக் கொண்டு இறங்கி ஓடினார்கள் 
 
மத்திய அரசின் அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல இடங்களில் ரயில்களுக்கு தீ வைக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
இந்த நிலையில் ரயில்களுக்கு தீ வைக்கும் போராட்டக்காரர்கள் ராணுவத்தில் சேர தகுதியற்றவர்கள் என்று முன்னாள் தளபதி விபி மாலிக் அவர்கள் தெரிவித்துள்ளார்
 
 

எல்லாம் காட்டு

டாஸ்மாக் பார்களில் பீடி, சிகரெட் விற்கக்கூடாது!.. தமிழக அரசு அதிரடி!...

3 நிமிஷத்துக்கு ஒரு டாப்பிக்!. விஜய் பேசுறதே ரீல்ஸ் வீடியோவுக்குதான்!.. ஆதவன் கமெண்ட்!..

கைது செய்தது சரிதான்.. இன்னும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்: திமுக எம்.எல்.ஏ கைது குறித்து அழகிரி...

புதிய பாடத்திட்டத்தை உருவாக்க முதல் ஆலோசனை கூட்டம்.. விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தலைமையில் தீவிரம்...

புதிய பேருந்துகளுக்கு தவெக கொடி கலரா? சமூக வலைத்தளங்களில் விவாதம்...

அடுத்த கட்டுரையில்
Show comments