நவீன மருத்துவம் குறித்த கருத்தை வாபஸ் பெற்றார் பாபா ராம்தேவ்!

திங்கள், 24 மே 2021 (07:31 IST)
பாபா ராம்தேவ் நவீன மருத்துவம் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை சமீபத்தில் கூறிய நிலையில் அந்த கருத்தை வாபஸ் பெற்றுக் கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சமீபத்தில் பாபா ராம்தேவ் நவீன மருத்துவம் முட்டாள்தனமானது என்று கூறினார். அதற்கு நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்தது. குறிப்பாக இந்திய மருத்துவ கவுன்சில் பாபா ராம்தேவுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அல்லது நவீன மருத்துவத்தை மூடி விடலாம் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தது.
 
இந்த நிலையில் நவீன மருத்துவம் குறித்து தாம் தெரிவித்த கருத்துக்கு கடும் கண்டனங்கள் எழுந்ததை அடுத்து தற்போது நவீன மருத்துவம் குறித்த தனது கருத்தை வாபஸ் பெற்றுக்கொண்டார். இதுகுறித்து ராம்தேவின் பதஞ்சலி அறக்கட்டளை சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், நவீன அறிவியல் மருத்துவத்தை ராம்தேவ் விமர்சிக்கவே இல்லை என்றும், அவர் தெரிவித்த கருத்துகள் அனைத்துமே தவறாக புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
 

எல்லாம் காட்டு

பரந்தூர் விமான நிலைய திட்டம் நிறுத்தம்? கையகப்படுத்தப்பட்ட இடத்தில் சிப்காட்?

அரசியல் தூண்டுதலின் அடிப்படையில் குழப்பம்.. சைதாப்பேட்டை ஹவுசிங் போர்டு விவகாரம் குறித்து தவெக விளக்கம்..

இனி யூடியூபில் உங்கள் சந்தேகங்கள் குறித்து கேள்வியும் கேட்கலாம்.. அறிமுகமாகிறது Ask YouTube..

டிகே சிவகுமார் முதல்வரானால் விஜய்க்கு பெரும் சவால்.. மேகதாது அணை விவகாரம் விஸ்வரூபம் எடுக்குமா?

நிதியமைச்சரிடம் விஜய் வைத்த கோரிக்கைகள்!.. தமிழ்நாட்டுக்கு நிதி கிடைக்குமா?..

அடுத்த கட்டுரையில்
Show comments