அறுந்துபோன 70 அடி உயர லிஃப்ட்: புத்தாண்டில் நேர்ந்த சோகம்

Arun Prasath
புதன், 1 ஜனவரி 2020 (16:06 IST)
மத்திய பிரதேசத்தில் 70 அடி உயரத்தில் இருந்து விழுந்த லிஃப்ட் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியதில், ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் உயிரிழந்தனர்.

மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்த புனித் அகர்வால் என்ற தொழிலதிபர், தன்னுடைய குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் இருந்தார். அங்கே கொண்டாட்டத்தை பார்த்து ரசித்து விட்டு லிஃப்ட்டில் தரை தளத்திற்கு வர முயன்றபோது, 70 அடி உயரத்தில் இருந்த லிஃப்ட், அறுந்துப்போய் முழு வேகத்தில் கீழே விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில் புனித் அகர்வால் உட்பட அவருடைய குடும்பத்தினரான பாலக் அகர்வால், பல்கேஷ் அகர்வால், நவ், நித்தி, கௌரவ், ஆரியவீர் ஆகியோர் சிக்கினர். இதில் நித்தி மட்டும் உயிருக்கு போராட்டிக்கொண்டிருக்கும் நிலையில் மற்ற அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எல்லாம் காட்டு

அண்ணாமலைக்கும், ஆட்டு மந்தைகளுக்கும் பாஜக கொள்கை புரியவில்லை: வேலூர் இப்ராஹிம் விமர்சனம்!

இனிமேல் அரசியலே வேண்டாம்.. அதிமுகவிலிருந்து விலகினார் நடிகை கௌதமி...!

விஜய் பத்தி கேட்டா ‘நோ கமெண்ட்ஸ்’.. தவெகவினரை கோபப்படுத்திய லதா ரஜினிகாந்த்..

மின்வெட்டு விவகாரம்: தவெக அரசை சாடி முன்னாள் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிக்கை!

ஆவின் "கிரீன் மேஜிக்" பால் விநியோகம் நிறுத்தம் என்ற செய்தி உண்மையா? அரசின் அதிகாரப்பூர்வ விளக்கம்!

அடுத்த கட்டுரையில்
Show comments