டெல்லி கிளம்பும் முன் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த்!

ஞாயிறு, 24 அக்டோபர் 2021 (11:11 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று டெல்லி கிளம்பிய நிலையில் சென்னை போயஸ் கார்டன் வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாளை டெல்லியில் தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் ரஜினிகாந்த் அவர்களுக்கு தாதா சாகேப் பால்கே விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்க உள்ளார். 
 
இதனையடுத்து இன்று டெல்லி கிளம்பிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் போயஸ் கார்டன் வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது மத்திய அரசின் தாதா சாகேப் விருது தனக்கு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றும் இந்த விருது கிடைக்கும் நேரத்தில் பாலசந்தர் இல்லை என்ற வருத்தம் எனக்கு உள்ளது என்றும் அவர் கூறினார் 
 
மேலும் விருதை வாங்கிக்கொண்டு சென்னை திரும்பிய உடன் மீண்டும் உங்களை சந்திக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

எல்லாம் காட்டு

அஜித் படம் வேண்டாம்!.. அந்த ஹீரோவிடம் கதை சொல்லி ஓகே பண்ணிய ஆதிக் ரவிச்சந்திரன்...

புலியைப் பார்த்து பூனை சூடு போட்ட கதை: காட்டாளன்' படத்தை வச்சு செய்த ப்ளூ சட்டை மாறன்!

இது எங்களின் குடும்ப நிகழ்வு மட்டுமே!.. அஜித்தின் சகோதரர் வேண்டுகோள்!..

அஜித்தின் தாய் காலமானார்!.. திரையுலகினர் இரங்கல்!..

குஷ்புவோட மருமகன் இவர்தான்!.. வெளியான குடும்ப போட்டோ!...

அடுத்த கட்டுரையில்
Show comments