டெல்லி கிளம்பும் முன் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த்!

Written By siva
Updated: ஞாயிறு, 24 அக்டோபர் 2021 (11:12 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று டெல்லி கிளம்பிய நிலையில் சென்னை போயஸ் கார்டன் வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். 
 
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தாதாசாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நாளை டெல்லியில் தேசிய விருதுகள் வழங்கும் விழாவில் ரஜினிகாந்த் அவர்களுக்கு தாதா சாகேப் பால்கே விருதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வழங்க உள்ளார். 
 
இதனையடுத்து இன்று டெல்லி கிளம்பிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் போயஸ் கார்டன் வீட்டில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது மத்திய அரசின் தாதா சாகேப் விருது தனக்கு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றும் இந்த விருது கிடைக்கும் நேரத்தில் பாலசந்தர் இல்லை என்ற வருத்தம் எனக்கு உள்ளது என்றும் அவர் கூறினார் 
 
மேலும் விருதை வாங்கிக்கொண்டு சென்னை திரும்பிய உடன் மீண்டும் உங்களை சந்திக்கிறேன் என்றும் அவர் தெரிவித்தார்.

எல்லாம் காட்டு

விரைவில் போயஸ்கார்டனில் குடியேறும் நயன்தாரா!.. வீடு ரெடி!...

ரஜினியின் பட்டத்தை ஆட்டய போட்ட தனுஷ்!.. இதெல்லாம் தெரிஞ்சிதான் நடக்குதா!..

உங்களை போன்ற ரசிகர்களை பெற்றதற்கு தனுஷ் கொடுத்து வைத்திருக்க வேண்டும்: கஸ்தூரி ராஜா

ஜனநாயகன் படத்தில் சர்ச்சையான காட்சிகள்!.. இயக்குனர் ஹெச்.வினோத்துக்கு நோட்டீஸ்!..

எங்ககிட்ட கொள்ளையடிச்சி எங்களுக்கு கொடுக்காதீங்க!.. ஆர்.கே.செல்வமணி ஆவேசம்..

அடுத்த கட்டுரையில்
Show comments