மீண்டும் 61,000 நெருங்கும் சென்செக்ஸ்: முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி!

புதன், 12 ஜனவரி 2022 (10:23 IST)
மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 335 புள்ளிகள் அதிகரித்து 60,952 புள்ளிகளில் வணிகமாகியுள்ளது. 

 
மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் புள்ளிகள் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்த நிலையில் இன்று மீண்டும் 500 புள்ளிகள் உயர்ந்து 60 ஆயிரத்தை தாண்டியுள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. 
 
மும்பை பங்கு சந்தையில் இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதலே ஏற்றத்தில் இருக்கும் நிலையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 335 புள்ளிகள் அதிகரித்து 60,952 புள்ளிகளில் வணிகமாகியுள்ளது. 
 
அதோடு தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 100 புள்ளிகள் அதிகரித்து 18,156 புள்ளிகளில் வர்த்தகமாகியிருக்கிறது. நேற்றும் வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை அன்று பங்குச் சந்தை ஏற்றம் கண்டுள்ளது பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

எல்லாம் காட்டு

10 மணிக்கெல்லாம் தலைமை செயலகம்.. மதிய சாப்பாடும் இங்கே தான்.. இப்படி ஒரு முதல்வரா? ஆச்சரியத்தில் ஊழியர்கள்..!

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில், தார்மீகப் பொறுப்பேற்கிறேன்: கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்

காவிரி நதிநீர் விவகாரம், மேகதாது அணை விவகாரங்கள்.. அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் முக்கிய ஆலோசனை..!

பெண்களுக்கு மாசம் ரூ.2500.. வேலையை துவங்கிய முதல்வர் விஜய்!..

ஸ்கெட்ச் மிஸ் ஆயிடுச்சி!.. அடுத்த ஸ்கெட்ச் சேப்பாக்கம்தான்!.. ஆதவ் அர்ஜுனா ராக்ஸ்!...

அடுத்த கட்டுரையில்
Show comments