தேர்தல் இழுபறியால் வரலாறு காணாத சரிவு.. சென்செக்ஸ் 4300 புள்ளிகள் சரிவு..!

Written By Mahendran
Updated: செவ்வாய், 4 ஜூன் 2024 (15:36 IST)
நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் பாஜக தனித்து ஆட்சி அமைக்க வழி இல்லை என்பதால் பங்குச்சந்தை படுமோசமாக சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
பாஜக கூட்டணி 295 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி 233 தொகுதிகளிலும் முன்னிலை பெற்றுள்ள நிலையில் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரண்டு கட்சிகளுமே தனித்து ஆட்சி அமைக்க வழி இல்லை என்றும் கூட்டணி ஆட்சிக்கு மட்டுமே சாத்தியம் என்பதும் தெரிய வந்துள்ளது
 
இதனை அடுத்து பங்குச்சந்தை இன்று காலை முதல் மிக மோசமாக சரிந்து உள்ளது. வரலாறு காணாத வகையில் சென்செக்ஸ் 4300 பள்ளிகளுக்கும் அதிகமாக சரிந்து உள்ளது என்றும் நிஃப்டி 1300க்கும் அதிகமான புள்ளிகள் சரிந்து உள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளன 
 
இந்த சரிவு காரணமாக முதலீட்டாளர்கள் மிக மோசமான நஷ்டத்தை எதிர்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 
Edited by Mahendran
 

எல்லாம் காட்டு

செப்டம்பர் மாதம் அமெரிக்க அரசு முடங்க போகிறதா? பைத்தியக்காரர்கள் என டிரம்ப் விமர்சனம்...

இந்தியாவில் 1500க்கும் மேற்பட்ட போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த அமெரிக்க தமிழர் கைது.. பிடிபட்டது எப்படி?

தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்: கரப்பான் பூச்சி கட்சி அறிவிப்பு..

அப்பா அம்மாவுடன் ஜனநாயகன் படம் பார்த்த முதல்வர் விஜய்.. அதிகாரிகளும் பார்த்ததாக தகவல்..

உறுதி அளித்தால் உண்ணாவிரதத்தைக் கைவிடத் தயாராக இருக்கிறேன்- சோனம் வாங்சுக்

அடுத்த கட்டுரையில்
Show comments