Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தேர்தல் பரப்புரையை எப்போது தொடங்குகிறார் இபிஎஸ்..? முழு விவரம் இதோ..?

Written By Senthil Velan
Updated: திங்கள், 18 மார்ச் 2024 (21:21 IST)
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  வரும் 24ம் தேதி தனது முதற்கட்ட பிரச்சாரத்தை திருச்சியில் துவங்க உள்ளார்.
 
வருகின்ற ஏப்ரல் 19ஆம் தேதி தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் களம் தற்போது சூடு பிடித்துள்ள நிலையில், பிரதமர் மோடி தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
 
இந்நிலையில்  அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி  வரும் 24ம் தேதி தனது முதற்கட்ட பிரச்சாரத்தை திருச்சியில் துவங்க உள்ளார். மார்ச் 24 ஆம் தேதி துவங்கும் முதற்கட்ட பிரச்சாரம் மார்ச் மாதம் 31ஆம் தேதி நாகப்பட்டினத்தில் முடிவடைகிறது.
 
எடப்பாடி பழனிச்சாமியின்  சுற்றுப்பயண விபரங்களை அதிமுக தலைமை கழகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, வருகிற 24 ஆம் தேதி திருச்சியிலும், 26 ஆம் தேதி தூத்துக்குடி, திருநெல்வேலியிலும், 27 ஆம் தேதி கன்னியாகுமரி மற்றும் தென்காசியிலும் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

ALSO READ: தேர்தல் விதிமீறல்..! பிரேமலதா மீது தேர்தல் அதிகாரி பரபரப்பு புகார்.!!

வருகிற 28ஆம் தேதி விருதுநகர் மற்றும் ராமநாதபுரத்திலும், 29ஆம் தேதி காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூரிலும், 30ஆம் தேதி புதுச்சேரி மற்றும் கடலூரிலும், 31 ஆம் தேதி சிதம்பரம், மயிலாடுதுறை மற்றும் நாகப்பட்டினத்திலும் எடப்பாடி பழனிச்சாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வார் என அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

எல்லாம் காட்டு

இன்று சட்டசபையில் ஒரு வார்த்தை கூட பேசாத உதயநிதி!.. என்னாச்சி?...

விவசாயிகளை வாழ வைக்கும் முதல்வர் விஜய்.. இது எதிர்க்கட்சிகளுக்கு புரியவில்லை: செங்கோட்டையன்

தவெக அரசை வைத்து காங்கிரஸ் நடத்தும் நாடகம் தான் Delimitation.. தயாநிதி மாறன் எக்ஸ் பதிவு..

அறங்காவலர்களை தேர்வு செய்யும் குழுவில் அர்ச்சனா கல்பாத்தி!.. தமிழக அரசு அறிவிப்பு..

மத்திய அரசு இணையதளத்தில் ரக்சிதா போட்டோ!.. ஒரே அக்கப்போரு!....

அடுத்த கட்டுரையில்
Show comments