செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. பாராளுமன்ற தேர்தல் 2019
  3. பாராளுமன்ற தேர்தல் 2019
Written By
Last Updated : வியாழன், 18 ஏப்ரல் 2019 (08:18 IST)

வாக்காளர் அடையாள அட்டை இல்லையா? நோ ப்ராப்ளம்.... இது இருந்தா போதும் தாராளமா ஓட்டு போடலாம்!!!

தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் கீழ்காணும் ஏதேனும் ஒரு ஆவணங்கள் இருந்தால் தாராளமாக வாக்களிக்கலாம்.
 
தமிழகத்தில் 38 மக்களவை மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் வாக்குப்பதிவு சற்றுமுன் தொடங்கியது.  பொதுமக்கள் காலையிலேயே நீண்ட வரிசையில் நின்று ஓட்டு போட தயாராகி வருகின்றனர். வாக்குச்சாவடியில் அசம்பாவிதத்தை தவிர்க்க போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதால் வாக்காளர்கள் பயமின்றி வாக்களித்து வருகின்றனர்.

தமிழகத்தில் மட்டுமின்றி புதுச்சேரி, அஸ்ஸாம், பீகார், சட்டீஸ்கர், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, மஹாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிஷா, திரிபுரா, உத்தரபிரதேசம், மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்களிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று மட்டும் மொத்தம் 13 மாநிலங்களில் 97 மக்களவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கத்து
 
தேர்தலில் வாக்களிக்க வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் கீழ்காணும் ஏதேனும் ஒரு ஆவணங்கள் இருந்தால் தாராளமாக வாக்களிக்கலாம்.
 
1. டிரைவிங் லைசென்ஸ்
2. பாஸ்போர்ட்
3. பேங்க் பாஸ்புக்
4. பான்கார்டு
5. ஓய்வூதிய அட்டை
 
உள்ளிட்ட ஆவணங்களில் ஏதேனும் இருந்தால் அவற்றை வைத்து தாராளமாக வாக்களிக்கலாம்.