சுடுகாட்டில் தியானம் செய்து அரசியல் செய்பவன் நானல்ல: ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கடும் தாக்கு!!!

சனி, 23 மார்ச் 2019 (09:49 IST)
சுடுகாட்டில் அமர்ந்து தியானம் செய்தோ அல்லது கிளி ஜோசியம் பார்த்தோ பதவி பெறவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர்  ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கடுமையாக பேசியுள்ளார்.
 
தேர்தலில் போடியிடும் அனைத்து கட்சிகளும் தங்களின் வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்ட நேற்று நிலையில் நள்ளிரவில் வேட்பாளர் பட்டியலை அறிவித்தது காங்கிரஸ்.
 
அந்த அறிவிப்பின்படி காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தேனி தொகுதியில் போட்டியிட இருக்கிறார்.
 
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், சுடுகாட்டில் அமர்ந்து தியானம் செய்தோ அல்லது கிளி ஜோசியம் செய்தோ பதவி பெற விரும்பவில்லை எனவும் மக்கள் நலனுக்காக பாடுபடுவதையே குறிக்கோளாக வைத்திருப்பதாகவும், 50 வருட அரசியலில் கரைபடியாத கரம் என பெயர் எடுத்துவைத்திருப்பதாகவும் கூறினார். 
 
தேனி தொகுதியில் மதவாத சக்திகளை அழித்து, நான் அமோக வெற்றிபெறுவேன் என நம்பிக்கை தெரிவித்தார். இவர் ஓபிஎஸ்சையும், ஹெச்.ராஜாவையும் தான் இப்படி கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

எல்லாம் காட்டு

தனியார் பள்ளிகளுக்கு இணையாக வாகன விளம்பரம்.. அசத்தும் அரசு பள்ளிகள்..!

மத்திய அரசு கொடுத்த பெண்கள் பாதுகாப்புக்கான நிர்பயா நிதியை திமுக பயன்படுத்தவில்லையா? திடுக் தகவல்..!

பல வருடங்களுக்கு பிறகு தூர்வாரப்படும் தஞ்சை பெரிய கோவில் அகழி.. பொதுமக்கள் மகிழ்ச்சி..!

மின்வெட்டுக்கு காரணம் ஒருசில கருப்பு ஆடுகள் தான்.. அமைச்சர் நிர்மல் குமார்...

பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகமாக வாங்கினால் ஊழியர்கள் சஸ்பெண்ட்.. அமைச்சர் எச்சரிக்கை...!

அடுத்த கட்டுரையில்
Show comments