எவ்ளோ நேரம் பேசினாலும் கம்பெனி கொடுக்கும் கூகுள் மீனா: புதிய அறிமுகம்!

சனி, 8 பிப்ரவரி 2020 (13:02 IST)
சிரி, அலெக்ஸா போன்ற ஆர்டிபிசியல் இண்டெலிஜன்ஸ் போல கூகுள் நிறுவனமும் மீனா என்ற புதிய போட்-ஐ அறிமுகப்படுத்த உள்ளார்கள்.

மனிதன் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் ஏஐ (AI – Artificial Intelligence) தொழில்நுட்பம் சமீப காலத்தில் வேகமாக பிரபலமடைந்து வருகிறது. அமேசானின் அலெக்ஸா போன்ற போட்-கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்பதும் உரையாடுவதுமாக இருப்பதால் இதற்கு வாடிக்கையாளர்கள் அதிகமாகி உள்ளனர்.

அலெக்ஸா போல உலகம் முழுவதிலும் மிட்ஸுகு, க்ளெவர்போட் போன்ற பல ஏ.ஐ போட்-கள் உள்ளன. இந்நிலையில் அவற்றை விட மிகவும் நுட்பமான திறன் கொண்ட மனிதர்கள் கேட்பதை மிக துல்லியமாக புரிந்துக் கொள்ளக்கூடிய போட் ஒன்றை கூகிள் நிறுவனம் வடிவமைத்து வருகிறது. மீனா எனப்படும் இந்த ஏ.ஐ மற்ற போட்-களை விட மனிதர்கள் பேசுவதை மிக துல்லியமாக புரிந்து கொண்டு பதில் சொல்லும் என்று கூறப்படுகிறது.

ஒரு மனிதர் பேசுவதை மற்றொரு மனிதர் புரிந்து கொண்டு பதில் சொல்வது 86% என்றால் மீனாவின் துல்லியம் 79% ஆகும். இதனால் மீனாவோடு பேசுவது ஒரு எந்திரத்தோடு பேசுவது போல அல்லாமல் உண்மையான பெண்ணோடு பேசுவது போலவே இருக்கும் என கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. மற்ற போட்கள் இதைவிட மிகவும் குறைவான துல்லிய திறன் பெற்றவை. கூகுளின் இந்த புதிய ஏ.ஐ போட்-க்காக பலர் ஆர்வத்தோடு காத்திருக்கிறார்கள்.

எல்லாம் காட்டு

விவசாயக் கடன் தள்ளுபடி!.. முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு..

இந்த கண்றாவியை பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?!.. முக ஸ்டாலின் ஆவேசம்...

ஆதவை சந்தித்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ சரவணன்!.. தவெகவில் இணைகிறாரா?...

ராஜினாமா செய்த 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் தவெகவில் இணைகிறார்களா? திருச்சி கிழக்கு உள்பட நான்கிலும் வெற்றி பெற்றால் 111..

ஆர்டிஇ திட்டத்தில் தனியார் பள்ளிகள் முறைகேடு: தவெக அரசு கடும் நடவடிக்கை எடுக்குமா?

அடுத்த கட்டுரையில்
Show comments