Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆளில்லா மைதானத்தில் தோனி ஓய்வு பெறுவதா? முன்னாள் வீரர் கருத்து!

Updated: திங்கள், 2 நவம்பர் 2020 (16:46 IST)
தோனி போன்ற வீரர்கள் ரசிகர்கள் முன்னால் ஒரு போட்டியிலாவது விளையாடி விட்டு அதன் பின்னர்தான் ஓய்வு பெறவேண்டும் என இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் கடைசி போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று நடந்தது. அப்போது இதுதான் சிஎஸ்கே அணிக்காக உங்கள் கடைசி போட்டியா எனக் கேட்டபோது தோனி ‘கண்டிப்பாக இல்லை’ எனக் கூறினார். இதனால் அவர் அடுத்த சீசனிலும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பேசியுள்ள இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் ‘அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரும் யுஏஇ-யில்தான் நடக்கும் போல் தெரிகிறது. அப்படி நடந்தால் 2022 ஐபிஎல் வரை தோனி ஆடியே ஆக வேண்டும். ஏனென்றால் தோனி போன்ற வீரர் ஆளில்லா மைதானத்தில் ஓய்வு பெறக் கூடாது. அவர் ரசிகர்கள் முன் ஒரு போட்டியாவது விளையாடி அதன் பின்னர்தான் ஓய்வு பெறவேண்டும் ‘ எனக் கூறியுள்ளார்.
 

எல்லாம் காட்டு

அஜித் அகர்கர் பதவிக்காலம் முடிகிறது.. பதவி நீட்டிப்பா? வேறொருவர் நியமனமா?

இந்திய - ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் ஹர்திக் பாண்டியா இல்லையா? என்ன காரணம்?

இம்ரான்கான் குறித்து வீரர்கள் கருத்து தெரிவிக்க கூடாது: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்...

கேப்டனுக்கு ஏற்பட்ட திடீர் காயம்.. வைபவ் சூர்யவன்ஷி புதிய கேப்டன் என அறிவிப்பு...

தொடர்ந்து சிக்சர்களை விளாசிய பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் சைம் அயூப்.. புள்ளிப்பட்டியலில் நான்காவது இடம்..

அடுத்த கட்டுரையில்
Show comments