Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டாஸ் வென்ற டெல்லி பவுலிங் தேர்வு: சி.எஸ்.கேவுடன் மோதப்போவது யார்?

Updated: புதன், 8 மே 2019 (19:14 IST)
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று நடைபெற்ற முதல் பிளே ஆஃப் போட்டியில் சிஎஸ்கே அணியை மும்பை அணி வீழ்த்திய நிலையில் இன்று எலிமினேட்டர் போட்டி நடைபெறுகிறது. இன்று வெற்றி பெறும் அணி, சிஎஸ்கே அணியுடன் வரும் 9ஆம் தேதி மோதும். அதில் வெற்றி பெறும் அணியே இறுதிப்போட்டியில் மும்பை அணியுடன் மோதும்.
 
இந்த நிலையில் இன்றைய எலிமினேட்டர் போட்டியில் டெல்லி மற்றும் ஐதராபாத் அணிகள் மோதவுள்ளது. சற்றுமுன் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இதனையடுத்து இன்னும் சில நிமிடங்களில் ஐதராபாத் அணி பேட்டிங் களத்தில் இறங்கவுள்ளது.
 
இன்றைய டெல்லி அணியில் பிரித்திவ் ஷா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட், முண்ட்ரோ, ரூதர்போர்டு, அக்சார் பட்டேல், கீமோ பால், அமித் மிஸ்ரா, டிரெண்ட் போல்ட், இஷாந்த் சர்மா ஆகியோர் உள்ளனர்.
 
அதேபோல் இன்று விளையாடும் ஐதராபாத் அணியில் சஹா, குப்தில், மனிஷ் பாண்டே, வில்லியம்சன், விஜய் சங்கர், தீபக் ஹூடா, நபி, ரஷித் கான், புவனேஷ்வர் குமார், கலீல் அஹ்மத் மற்றும் பசில் தம்பி ஆகியோர் உள்ளனர்.

எல்லாம் காட்டு

கேப்டனுக்கு ஏற்பட்ட திடீர் காயம்.. வைபவ் சூர்யவன்ஷி புதிய கேப்டன் என அறிவிப்பு...

தொடர்ந்து சிக்சர்களை விளாசிய பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் சைம் அயூப்.. புள்ளிப்பட்டியலில் நான்காவது இடம்..

இந்தியாவின் வெற்றியை தடுத்த இலங்கை பேட்ஸ்மேனின் சதம்.. டிராவை நோக்கி செல்கிறதா?

இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகி 2வது இன்னிங்ஸில்ம் விக்கெட்டுக்களை இழந்து வரும் இலங்கை...

ஃபாலோ ஆன் ஆகிடுமா இலங்கை.. இந்திய பந்து வீச்சாளர்கள் அபாரம்.. 2 பேட்ஸ்மேன்கள் சதம்...

அடுத்த கட்டுரையில்
Show comments