வாழ்வா? சாவா? போட்டியில் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது கொல்கத்தா அணி

சனி, 12 மே 2018 (10:54 IST)
ஐபிஎல் டி20தொடரின் இன்றைய போட்டியில் பஞ்சாப் அணியுடன் மீண்டும் மோதுகிறது கொல்கத்தா அணி.


 
 
ஐபில் தொடரின் 44-வது ஆட்டம் ஹால்கர் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் , தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.
 
இந்த ஐபிஎல் சீசனில் பஞ்சாப் அணி 10 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளை பெற்றுள்ளது. கொல்கத்தா அணியோ 11 போட்டிகளில் விளையாடி 5 வெற்றிகளை மட்டுமே பெற்றுள்ளது.
 
இரு அணிகளும் இதற்கு முன் மோதிய போட்டியில் பஞ்சாப் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த தோல்விக்கு பழிவாங்க கொல்கத்தா அணி வெற்றி பெற கடுமையாக போராடும். அதேபோல் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற பஞ்சாப் அணியும் வெற்றி பெற கடுமையாக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
மேலும், இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆப் சுற்றுக்கு வரிசையில் நீடிக்க முடியும் என்ற நிலையில் கொல்கத்தா அணிக்கு இந்த ஆட்டம்  வாழ்வா? சாவா? மோதல் ஆகும். 

எல்லாம் காட்டு

சிஎஸ்கே படுதோல்வி.. பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோனது.. அடுத்த சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை எவை?

சிஎஸ்கேவுக்கு இன்று கடைசி லீக் போட்டி.. ஜெயித்தாலும் பிளே ஆஃப் செல்ல முடியுமா?

வைபவ் சூர்யவன்ஷியின் வரலாற்றுச் சாதனை: கிரிக்கெட் உலகமே வியப்பு!

முதல்முறையாக சென்னையில் ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற பிக் பாஷ் டி20 லீக் போட்டி.. கிரிக்கெட் ரசிகர்கள் குஷி..!

தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வி.. பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் கூறும் காரணம் என்ன தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments