Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோப்பை யாருக்கு..? சென்னை - ஐதராபாத் நாளை மோதல்

Updated: சனி, 26 மே 2018 (11:08 IST)
ஐபிஎல் 11-வது சீசன் டி20 தொடரின் இறுதிப்போட்டி நாளை மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறுகிறது.
 
தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிக்கும் இடையேயான இறுதிப்போட்டி நாளை 7 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளும் கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் உள்ளனர்.
 
இந்த சீசனில் கடைசி 4 ஆட்டங்களிலும் தோல்வியை அடைந்திருந்த ஐதராபாத் அணி, நேற்றைய போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தியதன் மூலம் உற்சாகத்தில் உள்ளனர்.
 
முந்தைய 3 போட்டிகளில் சென்னையிடம் பெற்ற தோல்விக்கு இறுதி போட்டியில் பதிலடி கொடுத்து கோப்பையை கைப்பற்ற ஐதராபாத் அணி தீவிரமாக உள்ளது. அதேபோல், சென்னை அணி முந்தைய போட்டிகளில் ஐதராபாத் அணியை வீழ்த்தியதை போல இறுதிப்போட்டியிலும் வீழ்த்தி கோப்பையை கைப்பற்றும் முனைப்பில் சென்னை அணி உள்ளது.
 
சென்னை அணி இதுவரை 6 முறை இறுதி போட்டிக்கு தகுதிப்பெற்று 2 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. ஐதராபத் அணி இதுவரை 1 முறை இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்று அந்த போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

எல்லாம் காட்டு

இம்ரான்கான் குறித்து வீரர்கள் கருத்து தெரிவிக்க கூடாது: பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்...

கேப்டனுக்கு ஏற்பட்ட திடீர் காயம்.. வைபவ் சூர்யவன்ஷி புதிய கேப்டன் என அறிவிப்பு...

தொடர்ந்து சிக்சர்களை விளாசிய பாகிஸ்தான் ஆல்-ரவுண்டர் சைம் அயூப்.. புள்ளிப்பட்டியலில் நான்காவது இடம்..

இந்தியாவின் வெற்றியை தடுத்த இலங்கை பேட்ஸ்மேனின் சதம்.. டிராவை நோக்கி செல்கிறதா?

இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகி 2வது இன்னிங்ஸில்ம் விக்கெட்டுக்களை இழந்து வரும் இலங்கை...

அடுத்த கட்டுரையில்
Show comments