Daily Horoscope

இந்தியாவில் கொரோனா 4வது அலை: ஜூன் மாதம் வரும் என தகவல்

Written By siva
Updated: ஞாயிறு, 8 மே 2022 (09:21 IST)
தமிழகம் உள்பட இந்தியாவில் கொரனோ கொரோனா நான்காவது அலை ஜூன் மாதம் வருவதற்கு வாய்ப்பு உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் ஏற்கனவே கொரோனா மூன்று அலை பரவி இலட்சக்கணக்கான மக்களை பாதித்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் 4வது அலை ஜூன் மாதம் வர வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மீண்டும் தடுப்பூசி முகாம் தமிழகத்தில் நடைபெறுகிறது
 
தமிழகம் முழுவதும் இன்று ஒரு லட்சம் இடங்களில் மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது என்றும், மாநிலம் முழுவதும் ஒரே நாளில் ஒரு லட்சம் முகாம்கள் நடத்துவது இதுவே முதல் முறை என்றும் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது 
எனவே இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தாதவர்கள் உடனடியாக தடுப்பு ஊசி செலுத்தி கொண்டு நான்காவது அலையில் இருந்து பாதுகாத்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது
 
 

எல்லாம் காட்டு

பிரேமலு ஹீரோவை வச்சி படமெடுக்கும் சூர்யா.. விரைவில் அறிவிப்பு...

சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரித்த வெப்தொடர் ரிலீஸ் தேதி அறிவிப்பு.. எந்த ஓடிடியில்?

ரஜினி படம்.. அஜித் படம்... நம்ம படத்த என்ன பண்றது?.. குழப்பத்தில் தனுஷ்!...

விஜய் - அஜித்தின் சாதனையை முறியடித்த சூர்யா - ஜோதிகா

அப்பாவுக்கு நிறைய வேலை இருக்கு!. அவரை யூஸ் பண்ணமாட்டேன்!.. ஜேசன் சஞ்சய் பேட்டி!...

அடுத்த கட்டுரையில்
Show comments