Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை மார்கழி 1: கள்ளழகர் கோவிலில் நடை திறப்பு நேரம் மாற்றம்!

Written By Mahendran
Updated: வியாழன், 15 டிசம்பர் 2022 (21:04 IST)
நாளை மார்கழி மாதம் பிறக்க உள்ளதை அடுத்து கள்ளழகர் கோவிலில் நடை திறக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
நாளை முதல் ஜனவரி 14ஆம் தேதி வரை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படும் என்றும் 12 மணிக்கு நடை சாத்தப்பட்டு மீண்டும் மூன்று முப்பது மணிக்கு நடை திறக்கப்பட்டு இரவு 7 மணிக்கு நடை சாத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அதேபோல் மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் நடை திறக்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
 மார்கழி மாதம் 30 நாட்களும் இது போல் நடை திறக்கும் நேரம் மாற்றம் என்றும் ஜனவரி 14ஆம் தேதி முதல் வழக்கமான நடை திறக்கும் நேரம் மாறுபடும் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
 
Edited by Mahendran

அடுத்த கட்டுரையில்
Show comments