நாளை அனுமன் ஜெயந்தி: விரதம் இருந்தால் கோடி பலன்கள்!

Written By Mahendran
Updated: வியாழன், 22 டிசம்பர் 2022 (20:08 IST)
நாளை அனுமன் ஜெயந்தி கொண்டாட இருப்பதை அடுத்து நாளை விரதமிருந்தால் கோடி பலன் கிடைக்கும் என ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர். 
 
அனுமன் என்பவர் ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகிய இரண்டு இதிகாசங்களிலும் வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில் அனுமன் ஜெயந்தி நாளை ஆலயங்களில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் நாளை விரதமிருந்து அனுமனை வழிபட்டால் கோடி பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது
 
குறிப்பாக நாமக்கல்லில் உள்ள அனுமன் கோவிலில் நாளை மிகவும் விசேஷமாக இருக்கும் என்பதும் வடமலை சாத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
உங்கள் ஊரில் அனுமன் கோவில் இல்லை என்றால் ராமர் கோவிலுக்கு சென்று வழிபடலாம் என்றும் உணவு பிரியர் என்பதால் அவருக்கு பிடித்த பொரிகடலை அவல் சர்க்கரை உள்ளிட்ட உள்ளிட்டவற்றை நைவேத்தியமாக படைக்கலாம் என்று ஆன்மீகவாதிகள் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Mahendran

அடுத்த கட்டுரையில்
Show comments