நேற்றை விட ரூ.8 விலை அதிகரித்த தங்கம்! இன்றைய நிலவரம்!

புதன், 26 பிப்ரவரி 2020 (12:12 IST)
கடந்த சில வாரங்களில் விலை உயர்ந்த தங்கம் நேற்று விலை குறைந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.8 விலை உயர்ந்துள்ளது.

உலக அளவில் தங்கத்தின் மீதான முதலீடுகள் அதிகமான சூழலில் தங்கம் விலை கிடுகிடுவென ஏற தொடங்கியது. கடந்த வாரம் ரூ.32 ஆயிரத்தை தாண்டிய தங்கத்தின் விலை நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.752 உயர்ந்து ரூ.33,328 க்கு விற்பனை ஆகி வந்தது.

தங்கத்தின் இந்த திடீர் விலை உயர்வு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் நேற்று தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.552 குறைந்து ரூ.32,776 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது.

இந்நிலையில் இன்று  சென்னையில் 22 காரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.8 உயர்ந்து ரூ.32,784 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,098 ரூபாயாக உள்ளது.

கிடுகிடுவென விலை உயர்ந்த தங்கள் சிறிதளவே விலை குறைந்திருப்பது மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. தங்கத்தின் விலை குறையுமா என மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். 

எல்லாம் காட்டு

2 நாட்கள் டெல்லியில்!.. யாரையெல்லாம் சந்திக்கிறார் விஜய்?!... பரபர அப்டேட்...

மதுபோதையில் காரை ஓட்டிய 17 வயது சிறுவன்!.. விபத்தில் 11 வயது சிறுவன் மரணம்!..

சுற்றுலா மட்டுமல்ல, ஸ்டார்ட் அப் மாநிலமாக மாறும் கோவா.. அழகிய கடற்கரைகளுடன் ஐடி வளாகங்கள்..!

கொள்கை பேசி என்ன சாதித்தோம்? தவெக ஆதரவு வாட்ஸ்அப் மெசேஜை அம்பலப்படுத்திய காங்கிரஸ் வேட்பாளர் ஸ்ரீநிதி!

தமிழகத்தின் புதிய டிஜிபி யார்? டெல்லியில் தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் அவசர ஆலோசனை!

அடுத்த கட்டுரையில்
Show comments