Daily Horoscope

50 கோடி சிம் பிளாக்? பயனர்களின் நிலை என்ன?

Updated: வியாழன், 18 அக்டோபர் 2018 (15:26 IST)
ஆதார் எண் சிம் கார்ட்டுகளுக்கு கட்டாயமில்லை என தெரிவிக்கப்பட்டதை அடுத்து 50 கோடி சிம் எண் இணைப்புகள் துண்டிக்கப்பட வேண்டி உள்ளது என செய்திகள் வெளியாகியுள்ளது. 
 
அதாவது, மொபைல் இணைப்புகள் பெறும்போது, கேஒய்சி எனப்படும் வாடிக்கையாளர் தொடர்பான விவரங்கள் பெறப்படுகின்றன. ஆதார் எண்ணைக் குறிப்பிட்டால், அதன் மூலம் தனிப்பட்ட விவரங்களை எடுத்துக்கொள்ளும் நடைமுறையில் சுமார் 50 கோடி மொபைல் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
 
ஜியோ, சுமார் 25 கோடி இணைப்புகளை இவ்வாறு வழங்கியுள்ளது. பாரதி ஏர்டெல், வோடபோன் - ஐடியா, பிஎஸ்என்எல் போன்றவையும் இவ்வாறு இணைப்புகளை வழங்கியுள்ளன. ஆதார் இணைப்பின் மூலம் அனைத்தும் டிஜிட்டல் மயமாகியுள்ளது. 
 
இந்நிலையில், மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைத்த வாடிக்கையாளர்கள், அதற்கு முன்னர் வழங்கிய கேஒய்சி ஆவணங்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களால் அழிக்கப்பட்டிருக்கக்கூடும்.
 
எனவே, 50 கோடி மொபைல் இணைப்புகளுக்கு, புதிதாக வாடிக்கையாளர் விவரங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெறும் நிலை உருவாகியுள்ளது. இது குறித்து தொலைத்தொடர்ப்பு துறை, 50 கோடி மொபைல் எண்கள் துண்டிப்பு என ஊடக அறிக்கை பொய்யானது. ஆனால், இந்நிலை குறித்து அறிவிப்புகள் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

அலார்ட்டா இருக்கணும்!.. தவெகவை பகைத்துக்கொள்ளாத எ.வ.வேலு!.. அப்செட்டில் திமுக தலைமை!..

கண்டபடி திட்டினேன்!.. விஜய் ஒரு கோடி கொடுத்தார்!. கருணாஸ் பேட்டி!..

டாஸ்மாக் பார்களில் உணவுக்கூடம்(Resto Bar).. அமைச்சர் விக்னேஷ் அறிவிப்பு...

பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்.. ஒரு செங்கலை கூட வைக்க விடமாட்டோம்: ஜெயகுமார்

விஜய் லண்டனுக்கு ஜாலி டூர் போனாரா?!... எடப்பாடி பழனிச்சாமி நக்கல்...

அடுத்த கட்டுரையில்
Show comments