ஜியோபோன் விநியோக தேதி மாற்றம்; வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!

புதன், 20 செப்டம்பர் 2017 (11:33 IST)
ரிலையன்ஸ் ஜியோவின் இலவச மொபைலை விரைவில் பயன்படுத்த ஆவலோடு காத்திருப்போருக்கு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.


 


 
நிலையன்ஸ் ஜியோ ஆரம்பம் முதல் ஏராளமான சலுகைகளை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது. ஜியோபோன் என்ற இலவச மொபைல் வழங்குவதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அறிவித்தது. அந்த இலவச மொபைலை பெற முன்பதிவு செய்ய வேண்டும். அதற்கு இருப்பு தொகையும் செலுத்த வேண்டும். 3 வருடங்கள் கழித்து இருப்பு தொகை திருப்பி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
 
இந்நிலையில் ஜியோபோனை முன்பதிவு செய்து பயன்படுத்த காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் விநியோகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படது. ஆனால் ஜியோபோன் முன்பதிவு அதிக அளவில் இருந்ததால், முன்பதிவு நிறுத்தப்பட்டது. 
 
ஜியோபோன் அடுத்த மாதம் 1ஆம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் பல லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ள நிலையில் இன்னும் பலர் முன்பதிவு செய்ய காத்திருக்கின்றனர். மேலும் ஜியோபோன் முன்பதிவு விரைவில் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

திடீரென அரசு மருத்துவமனைக்கு விசிட் அடித்த முதல்வர் விஜய்!. வைரல் போட்டோ...

செந்தில் பாலாஜி, அசோக் குமாருக்கு முன் ஜாமீன்!.. தவெகவுக்கு பின்னடைவு!...

தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை: சிறுவனின் ஆணுறுப்பு அகற்றம், மருத்துவர்களின் ஆடியோவால் பரபரப்பு

சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் விஜய் திடீர் ஆய்வு.. என்ன நடந்தது?

திமுக - தவெக கூட்டணி: திருமாவளவனின் அதிரடி பேட்டியால் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments