புதிய 50 ரூபாய் நோட்டு; உறுதிப்படுத்திய ஆர்பிஐ

வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (19:44 IST)
புதிய 50 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட உள்ளது.


 

 
புதிய 50 ரூபாய் நோட்டுகளின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மீண்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள போகிறது என சிலர் கருதினர். இருந்தும் அதிகாரப்பூர்வமான தகவலாக இல்லாததால் சிலர் நம்பவில்லை. 
 
இந்நிலையில் ரிசர்வ் வங்கி தற்போது புதிய 50 ரூபாய் நோட்டுக்கள் வெளியிட போவதை உறுதி செய்துள்ளது. புதிய 50 ரூபாய் நோட்டுக்கள் புத்தாண்டு முதல் புழக்கத்து வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
இந்த புதிய 50 ரூபாய் நோட்டின் பின்புறம் தென்னிந்தியாவை சேர்ந்த வரலாற்று சின்னமான ஹம்பி தேர் இடம்பெற்றுள்ளது. மேலும் தற்போது புழக்கத்தில் உள்ள அனைத்து 50 ரூபாய் நோட்டுக்கள் தொடர்ந்து புழகத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

தத்துவம் இல்லாத அரசியல்!.. உங்களை கொன்னு கூட அவன் ஜெயிப்பான்!.. இளவரசு யாரை சொல்றாரு!..

தவெகவுடன் கூட்டணி!.. பக்கா பிளான் போடும் என்.ஆர்.ரங்கசாமி!.. நடப்பது என்ன?..

திமுகவில் இணைய ரூ.500 கோடி பேரம்: ஆடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு தவெக எம்எல்ஏ அதிரடி புகார்!

போதைப்பொருளுக்கு எதிரான சிறப்பு வேட்டை: மூன்றே நாட்களில் 621 பேர் கைது! 296 கிலோ கஞ்சா பறிமுதல்..

தமிழக காங்கிரஸ் எம்எல்ஏ மீது வழக்கு போட்ட கேரள காங்கிரஸ் அரசு.. என்ன காரணம்?

அடுத்த கட்டுரையில்
Show comments