புதிய 50 ரூபாய் நோட்டு; உறுதிப்படுத்திய ஆர்பிஐ

வெள்ளி, 18 ஆகஸ்ட் 2017 (19:44 IST)
புதிய 50 ரூபாய் நோட்டுக்களை ரிசர்வ் வங்கி விரைவில் வெளியிட உள்ளது.


 

 
புதிய 50 ரூபாய் நோட்டுகளின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மீண்டும் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்ள போகிறது என சிலர் கருதினர். இருந்தும் அதிகாரப்பூர்வமான தகவலாக இல்லாததால் சிலர் நம்பவில்லை. 
 
இந்நிலையில் ரிசர்வ் வங்கி தற்போது புதிய 50 ரூபாய் நோட்டுக்கள் வெளியிட போவதை உறுதி செய்துள்ளது. புதிய 50 ரூபாய் நோட்டுக்கள் புத்தாண்டு முதல் புழக்கத்து வரும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
இந்த புதிய 50 ரூபாய் நோட்டின் பின்புறம் தென்னிந்தியாவை சேர்ந்த வரலாற்று சின்னமான ஹம்பி தேர் இடம்பெற்றுள்ளது. மேலும் தற்போது புழக்கத்தில் உள்ள அனைத்து 50 ரூபாய் நோட்டுக்கள் தொடர்ந்து புழகத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

எல்லாரும் 10 மணிக்குள்ள ஆபிசுக்கு வரணும்!. முதல்வர் விஜய் போட்ட ஆர்டர்!...

அவலமான நிலையில் அம்மா உணவகம்.. லெப்ட் ரைட் வாங்கிய டிவிகே எம்.எல்.ஏ ரமேஷ்..!

மகளிர் உரிமைத் தொகை மக்களின் வரிப்பணம்: முஸ்தபா அதிரடி பதில்!

பொதுக்குழுவை உடனே கூட்டுங்கள்: எடப்பாடி பழனிசாமிக்கு சி.வி. சண்முகம் தரப்பு சவால்!

தேமுதிகவை வலுக்கட்டாயமாக வெளியேற்றினார்கள் - எடப்பாடி பழனிசாமி மீது சி.வி.சண்முகம் புகார்

அடுத்த கட்டுரையில்
Show comments