சிம் இல்லா மொபைல்போன்... பிஎஸ்என்எல் விங்ஸ் சர்வீஸ்!

சனி, 28 ஜூலை 2018 (14:21 IST)
பிஎஸ்என்எல் நிறுவனம் பிஎஸ்என்எல் விங்ஸ் என்ற பெயரில் சிம் இல்லாத மொபைல்போன் சேவையை அறிமுகம் செய்துள்ளது. தற்போது அடுத்தக்கட்ட நடவடிக்கையாக வை-பை அடிப்படையில் செயல்படக்கூடிய பிஎஸ்என்எல் விங்ஸ் சேவைவை வழங்க இருக்கிறது. 
பிஎஸ்என்எல் விங்ஸ் சேவை ஆகஸ்டு 1 ஆம் தேதி முதல் துவங்க இருக்கிறது. இந்த சேவைக்கு சிம்கார்டு தேவையில்லை. ஒரு 10 இலக்க எண் மட்டும் வழங்கப்படும். இதற்கான ஒருமுறை பதிவு கட்டணம் ரூ.1099 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 
ஸ்மார்ட்போனில் இதற்கான ஆப்பை டவுன்லோடு செய்ய வேண்டும்.  வை-பை இணைப்பு அல்லது மொபைல் டேட்டா வைத்திருப்பவர்கள் நாடு முழுவதும் எங்கிருந்தும் எங்கு வேண்டுமானாலும் பேசலாம். 
 
இந்த சேவையை பிஎஸ்என்எல் இணைப்பு பெற்றவர்கள் மட்டும்தான் பயன்படுத்த முடியும் என்பதில்லை வேறு நெட்வொர்க்கை பயன்படுத்துபவர்களும் பயன்படுத்த முடியும்.

எல்லாம் காட்டு

பனையூர் கேட் எப்போது திறக்கும் என்று ஏங்கி பார்த்து கொண்டு நிற்கிறார்கள்: கேபி முனுசாமி கண்டனம்...

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோக பொருட்கள்: மெட்டா நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்..

தவெக ஆட்சியை கவிழ்க்க சதி.. மேலும் ஒருவர் கைது.. கைது எண்ணிக்கை 9 ஆக உயர்வு...

சீமான், உதயநிதி திடீர் சந்திப்பு.. சீமான் கையை பிடித்து நாற்காலியில் உட்கார வைத்த உதயநிதி...

குதிரை பேரம் குறித்து விசாரிக்க அதிகாரம் இருந்தால் ஆளுனர் விசாரிக்க வேண்டும்: திருமாவளவன்

அடுத்த கட்டுரையில்
Show comments