50% கேஷ்பேக்: தாமதமாய் வரிந்துக்கட்டும் பிஎஸ்என்எல்...

சனி, 10 பிப்ரவரி 2018 (15:21 IST)
ஜியோ சலுகைகள் மற்றும் கேஷ்பேக் சேவைகளை வாரி வழங்குவதால் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தங்களது பங்கிற்கு சலுகைகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் பிஎஸ்என்எல் நிறுவனமும் சலுகை வழங்கியுள்ளது. 
 
பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் பிரீபெயிட் ரீசார்ஜ்களுக்கு அதிகபட்சம் 50% வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது. பிளிப்கார்ட்-இன் போன்பெ செயலி மூலம் ரீசார்ஜ் செய்வோர் 50% கேஷ்பேக் பெற முடியும்.
 
ரூ.250-க்குள் ரீசார்ஜ் செய்யும் போது அதிகபட்சம் ரூ.50 வரை கேஷ்பேக் பெற முடியும். போன்பெ சேவையை கொண்டு முதல் ஐந்து பிஎஸ்என்எல் ரீசார்ஜ் செய்வோருக்கு மட்டுமே இந்த கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
 
போன்பெ மூலம் வழங்கப்படும் பிஎஸ்என்எல் கேஷ்பேக் சலுகை பிப்ரவரி 20 ஆம் தேதி வரை வழங்கப்படும். மேலும் பிஎஸ்என்எல் அதிகாரப்பூர்வ வலைதளத்தின் மூலம் ரீசார்ஜ் செய்யும் போது இந்த கேஷ்பேக் சலுகைகள் கிடைக்கும். 

எல்லாம் காட்டு

எல்லாரும் சேர்ந்து டெல்லிக்கு போய் சொல்லுவோம்!.. சட்டசபையில் உதயநிதி சொன்ன ஐடியா!...

தமிழகத்தில் இன்று மழை கொட்டப்போகுது!. எந்தெந்த ஊரில் தெரியுமா?...

தென்னிந்தியாவின் மிகப்பெரிய கட்சி தவெக.. 2 கோடிக்கும் மேல் உறுப்பினர்கள்..

மேகதாது அணைக்கு எதிராக சட்டசபையில் தனித்தீர்மானம்: முதலமைச்சர் விஜய்க்கு விசிக முழு ஆதரவு

தமிழகத்தில் பி.எட் படிப்பிற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்: உயர்கல்வித்துறை முக்கிய அறிவிப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments