ஜியோவின் ஆட்டம் க்ளோஸ்: அமேசான் எடுத்த அதிரடி முடிவு!

செவ்வாய், 9 ஏப்ரல் 2019 (12:55 IST)
பிரபல ஆன்லைன் விற்பனை தளமான அமேசான் அதிவேக பிராட்பேண்ட் சேவையை வழங்க முடிவெடுத்துள்ளது. இதற்காக 3,236 செயற்கைக்கோள்களை அனுப்ப திட்டமிட்டுள்ளது. 
 
ஆம், இணைய சேவை கிடைக்காத உலகின் பல பகுதிகளுக்கு அதிவேக இண்டெர்நெட் சேவைகளை வழங்க அமேசான் ‘புராஜக்ட் குய்பர்’ என்னும் அதிரடி திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்துள்ளது. 
 
இந்த திட்டத்தின்படி, 3,236 செயற்கைக்கோள்களை பூமிக்கு அருகில் உள்ள சுற்றுவட்ட பாதையில் நிலை நிறுத்த உள்ளனர். இதன் மூலம் குறைவான நேரத்தில் அதிவேக இணைய சேவையை வழங்க முடியுமாம். 
இந்த திட்டத்தை செயல்படுத்த ஒரு பில்லியல் டாலர் வரை செலவாகலாம் என்ற தகவலை வெளியிட்டுள்ளது. இந்த திட்டத்தை சாத்தியப்படுத்தியதும், சரிவர இணையவசதி கிடைக்காத பல கோடிக் கணக்கான மக்களுக்கு இணைய வசதி எளிதாக கிடைக்கும் என அமேசான் குறிப்பிட்டுள்ளது. 
 
மேலும், அமேசான் இணைய கட்டணத்தை குறைவாக நிர்ணயம் செய்யவும் அதிக வாய்ப்புகள் உள்ளது. அப்படி இருக்க ஜியோவின் ஜிகா ஃபைபர் திட்டத்திற்கு கடும் போட்டியாக இது இருக்கும் என கூறப்படுகிறது. 

எல்லாம் காட்டு

பயிர்க்கடன் மிகப்பெரிய ஏமாற்றம்!.. தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம்!.. விவசாயிகள் சங்கம் அறிவிப்பு..

பயிர்க்கடன் தள்ளுபடி ஒரு பெரிய ஸ்கேம்!.. இன்னும் எவ்ளோ ஏமாத்துவீங்க?.. உதயநிதி காட்டம்!...

மேலும் ஒரு அதிமுக எம்.எல்.ஏ ராஜினாமா!.. எடப்பாடி பழனிச்சாமி ஷாக்!.. தமிழக அரசியலில் பரபரப்பு..

இன்று முதல் டாஸ்மாக் கடைகளை திறக்கமாட்டோம்!.. ஊழியர்கள் போராட்டம் அறிவிப்பு...

மேலும் 3 அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்ய திட்டமா? மொத்தம் 10 எம்.எல்.ஏக்கள் விலகுவார்கள் என கணிப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments