Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆப்படித்த அலிபாபா; அமேசானுக்கு இதுதான் கதி...

Updated: திங்கள், 22 ஏப்ரல் 2019 (13:30 IST)
ஆப்பிள் நிறுவனத்தை அடுத்து உலகின் மிகப்பெரிய மதிப்பு கொண்ட நிறுவனங்கள் பட்டியலில் அமேசான் உள்ளது. அமேசானில் சுமார் 5 லட்ச ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், உலகின் மிகப்பெரிய வணிக நிறுவனமாக இது செயல்பட்டு வருகிறது. 
 
இந்நிலையில் அமேசான் சீனாவிட்டு வெளியேற முடிவு செய்துள்ளதாம். ஆம், கடந்த 2004 ஆம் ஆண்டு சீனாவில் நுழைந்த அமேசானுக்கு, சீனாவை சேர்ந்த அலிபாபா நிறுவனம் கடும் போட்டியாக இருந்தது. 
 
உள்ளூர் பொருட்களை விலைக்கு வாங்கி ஆன்லைனில் விற்பனை செய்வதில் குறைந்த செலவில் அலிபாபா சாதித்த காட்டியது. ஆனால், அமேசான் இதில் கோட்டை விட்டது. இதோடு அந்நாட்டை சேர்ந்த ஜேடி.காம் போன்ற நிறுவனங்களும் அமேசானுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது. 
 
எனவே, சீனாவிலிருந்து முற்றிலுமாக வெளியேற அமேசான் முடிவு செய்துள்ளது. அதோடு, சீன சந்தை கைகொடுக்காத சூழலில் இனிமேல் முழு கவனமும் இந்தியா மீதுதான் என அமேசான் கூறியுள்ளது.

எல்லாம் காட்டு

கட்சிக்காக 5 பேரை தேர்வு செய்து கொடுத்த தனுஷ்?!.. விரைவில் தேர்தல் ஆணையத்தில் பதிவு!..

பாகிஸ்தானில் திறக்கப்படும் முதல் கூகுள் அலுவலகம்.. பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் திறந்து வைத்தார்...

உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ஆகிறாரா முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர்.. சுயசரிதையும் வரப்போகிறதா?

திமுகவை அடுத்து அதிமுகவிலும் நிர்வாக ரீதியான மாற்றமா? கூட்டத்தை கூட்டும் ஈபிஎஸ்...

பள்ளிகளை ஆய்வு செய்யும் கரப்பான்பூச்சி கட்சி.. வாடகைக்கு மாணவர்களை கொண்டு வந்த பள்ளி நிர்வாகம்..

அடுத்த கட்டுரையில்
Show comments