1. பொழுதுபோக்கு
  2. »
  3. சினிமா
  4. »
  5. சினிமா செய்தி

ஒரே ஏரியாவில் குரு சிஷ்யர்கள்!

ஒரே ஏரியாவில் குரு சிஷ்யர்கள்!
இயக்குனர் பாலா சேது படம் இயக்கியபோது அதில் அமீர், சசி இருவரும் உதவியாளராக இருந்தார்கள்.

அதன்பிறகு அமீர் பாலாவோடு சண்டை போட்டு வெளியில் வந்தபோது சசியும் உடன் கிளம்பி வந்துவிட்டார்.

அதன் பிறகு அவரோடு சேர்ந்து மௌனம் பேசியதே, ராம் இரண்டிலும் வேலை பார்த்தார்.

இப்போது வெளியில் வந்து சுப்ரமண்யபுரம் என்ற படத்தை தயாரித்து இயக்குகிறார்.

இப்போ அமீர் தன டீம் ஒர்க் பேனரில் யோகி படம் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

சரி...இப்போ எதற்கு இதெல்லாம் என்கிறீர்களா!? இருக்கு.. பாலாவின் நான் கடவுள் படம் பெரியகுளம் பகுதியில் நடக்கிறது.

சசியின் சுப்ரமண்யபுரம் திண்டுக்கல்லில் நடக்கிறது. அமீர் அடுத்த வாரம் மதுரை போகிறார். ஆக... குரு, சிஷ்யர்கள் மூவரும் ஒரே நேரத்தில் ஒரே பகுதியில் படம் எடுக்கிறார்கள்.