கடைசி ஓவரை ஏன் அவரிடம் கொடுத்தேன்… ஹர்திக் பாண்ட்யா பதில்!

புதன், 4 ஜனவரி 2023 (15:07 IST)
நேற்றைய பரபரப்பான போட்டியில் கடைசி ஓவரை சிறப்பாக வீசி அக்ஸர் படேல் வெற்றியை இந்திய அணிக்குப் பெற்றுத் தந்தார்.

நேற்று நடந்த முதல் டி 20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட் செய்து 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் சேர்த்தது. இந்திய அணியில் தீபக் ஹூடா மற்றும் அக்ஸர் படேல் ஆகியோர் கடைசி நேரத்தில் சிறப்பாக விளையாடி இந்திய அணியைக் கரைசேர்த்தனர்.

இதையடுத்து ஆடிய இலங்கை அணி இலக்கை துரத்திய நிலையில் கடைசி ஓவர் வரை ஆட்டம் பரபரப்பாக சென்றது. இதில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட போது அந்த ஓவரை தான் வீசாமல், அக்ஸர் படேலுக்கு கொடுத்தார். அந்த ஓவரில் 10 ரன்கள் கொடுத்த அக்ஸர் படேல் சிறப்பாக பந்துவீசினார். இதுபற்றி பேசிய ஹர்திக் படேல் “கடைசி ஓவரை நான் வீசாமல் அக்ஸர் படேலுக்குக் கொடுத்த காரணம், எனது வீரர்கள் இக்கட்டான நிலைமையை எதிர்கொள்ள வேண்டும் என நினைத்தேன். இதுபோன்ற சூழல்களால்தான நிறைய பாடங்கள் கிடைக்கும். நேற்றைய போட்டியில் அனைத்து இளம் வீரர்களும் சிறப்பாக விளையாடினர்” எனக் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

டிராவிட் ஹெட் மனைவிக்கு மிரட்டல் விடுத்த ஐபிஎல் ரசிகர்கள்...! அநாகரீகமான முறையில் விராத் ரசிகர்கள்?

வைபவ் மனது வைத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு ராஜஸ்தான் செல்ல வாய்ப்பு.. இன்று மும்பையுடன் மோதல்..!

சிஎஸ்கே படுதோல்வி.. பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோனது.. அடுத்த சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை எவை?

சிஎஸ்கேவுக்கு இன்று கடைசி லீக் போட்டி.. ஜெயித்தாலும் பிளே ஆஃப் செல்ல முடியுமா?

வைபவ் சூர்யவன்ஷியின் வரலாற்றுச் சாதனை: கிரிக்கெட் உலகமே வியப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments