1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By sinoj
Last Modified: செவ்வாய், 31 ஆகஸ்ட் 2021 (17:06 IST)

கிரிக்கெட்டிற்கு தாலிபன்கள் அனுமதி?

உலகக் கோப்பைதொடரில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அனுமதிப்படுவார்கள் எனத் பாகிஸ்தான் முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் அஃபிரிடி தெரிவித்துள்ளார்

அமெரிக்க அதிபராக ஜோ பிடன் பதவியேற்ற பின் தனது தேர்தல் வாக்குறுதியின்படி, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகளைத் திரும்பப் பெற்றார்.

அதனால் ஆப்கானில் தாலிபன்கள் அந்நாட்டைக் கைப்பற்றியுள்ளனர். எனவே மற்ற நாட்டவர்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.

சமீபத்தில் டி-20  உலகக் கோப்பைத் தொடரில் ஆப்கானிஸ்தான் அணி பங்கேற்கும் என அந்நாட்டி கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

இந்நிலையில், தலிபான்கள் கிரிக்கெட் விளையாட்ட அந்நாட்டு வீரர்களை அனுமதிப்பார்களா எனக் கேள்வி எழுந்த நிலையில், இதுகுறித்து பாகிஸ்தான் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் அஃபிரிடி கருத்துத் தெரிவித்துள்ளார்.

அதில், தலிபான்கள் பாசிடிவ் ஆன மனநிலையில் உள்ளனர். பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்கள் வேலைக்குச் செல்வதை அனுமதித்து வருகின்றனர்.