Daily Horoscope

நான்காவது போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு கொடுத்தது மிகவும் தவறு… மூத்த வீரர் கண்டனம்!

Written By vinoth
Updated: செவ்வாய், 5 மார்ச் 2024 (07:09 IST)
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடக்கும் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை வென்றது. சமீபத்தில் நடந்த நான்காவது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டது சர்ச்சைகளைக் கிளப்பியது.

அந்த போட்டியில் அவருக்கு பதிலாக அணியில் இணைந்த ஆகாஷ் தீப் சிறப்பாக பந்துவீசியதால் இந்திய அணி எளிதாக வெற்றி பெற்றது. ஆனாலும் பும்ராவுக்கு ஓய்வளிக்கப்பட்டது தவறான முடிவு என முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது பற்றிய அவரது பேட்டியில் “மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா 23 ஓவர்கள் மட்டுமே வீசினார். அப்படி இருக்கும் போது அவருக்கு நான்காவது டெஸ்ட் போட்டியில் அவருக்கு ஓய்வளித்தது தவறான முடிவு. நான்காவது டெஸ்ட் போட்டி மிகவும் முக்கியமான போட்டி. ஒருவேளை இந்த போட்டியை இந்திய அணி தோற்றிருந்தால் கடைசி போட்டி தொடரை முடிவு செய்யும் போட்டியாக அமைந்திருக்கும். பும்ராவுக்கு ஓய்வளிக்கும் முடிவை என் சி ஏ எடுத்ததோ அல்லது பும்ராவே எடுத்தாரா , அது அணிக்கு நன்மை பயக்கும் முடிவு இல்லை. ஆனாலும் நான்காவது போட்டியில் இந்திய அணியின் வெற்றி அணிக்கு பெரிய வீரர்கள் தேவையில்லை என்பதைக் காட்டுகிறது” எனக் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்.. செப் 13 இறுதி போட்டியில் இந்தியாவுடன் மோதுவது பாகிஸ்தானா?

ஐபிஎல் போல் தனியார் மயமாகிறதா ஆஸ்திரேலியாவின் Big Bash League.. இந்திய தொழிலதிபர்கள் அணிகளை வாங்க ஆர்வம்..

இது தான் பாகிஸ்தானின் பெஸ்ட் அணி.. 55 ரன்களுக்கு ஆல் அவுட் ஆன அணி குறித்து பயிற்சியாளர்..

அடுத்த கட்டுரையில்
Show comments