Daily Horoscope

அஸ்வின் விக்கெட் எடுக்காததற்கு இதுதான் காரணம்… விமர்சனம் செய்த சேவாக்!

Written By vinoth
Updated: திங்கள், 29 ஏப்ரல் 2024 (23:19 IST)
இந்திய அணியின் மூத்த பவுலரான அஸ்வின் தற்போது சர்வதேச அளவில் டெஸ்ட் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். அதே போல ஐபில் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.

ஆனால் அஸ்வினுக்கு இந்த சீசன் மிகவும் மோசமான ஒன்றாக அமைந்துள்ளது. சீசனில் 8 போட்டிகள் விளையாடியுள்ள அவர் இரண்டே இரண்டு விக்கெட்கள் மட்டும் வீழ்த்தியுள்ளார்.  அவர் 200 பந்துகளுக்கு மேல் வீசியுள்ள நிலையில் ஓவருக்கு 9 ரன்களுக்கு மேல் கொடுத்துள்ளார். அவரின் மோசமான ஐபிஎல் சீசனாக இந்த சீசன் அமைந்துள்ளது.

இதுபற்றி இந்திய அணியின் மூத்த வீரரான சேவாக் விமர்சனம் செய்துள்ளார். அதில் “அஸ்வின் விக்கெட்களை எடுக்கவேண்டும் என பந்துவீசுவதில்லை. மாறாக குறைவான ரன்களைக் கொடுக்கவேண்டும் என்றே அவர் பந்துவீசுகிறார். ஆஃப் ஸ்பின் பந்துவீசினால் பவுண்டரி அடிப்பார்கள் என கேரம் பால்களை வீசுகிறார். ஆனால் நான் ஒரு பயிற்சியாளராக ஆலோசகராகவோ இருந்தால் அவரை விக்கெட்கள் எடுக்கும் பந்துகளைதான் வீச சொல்வேன்” எனக் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments