2வது டி20 போட்டி; இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று பலபரீட்சை

வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (10:51 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. 
 
இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டியில் இந்தியா 200 ரன்களுக்கு மேல் அடித்த போதிலும் தோல்வியடைந்தது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது 
 
இந்த நிலையில் இன்று இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டிகள் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாக்பூரில் நடைபெறும் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது 
 
இன்றைய போட்டியிலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றால் தொடரை வென்று விடும் என்பதால் இந்திய அணியினர் முதல் போட்டியின் தோல்விக்கு பதிலடி கொடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
இன்று இரவு 7 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை காண ரசிகர்கள் அனைவரும் ஆர்வத்துடன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

கோப்பையை வென்ற ஸ்பெயின் அணிக்கு இத்தனை கோடியா? குவியும் பரிசுமழை...

FIFA உலக கால்பந்து போட்டி!.. அர்ஜென்டினா கோட்டை விட்டது எங்கே?...

டி20 தொடரை அடுத்து ஒருநாள் தொடரையும் இழந்த இந்தியா.. ரசிகர்கள் அதிருப்தி..

உலகக்கோப்பை கால்பந்து.. அர்ஜென்டினாவை வீழ்த்தி ஸ்பெயின் அணி சாம்பியன்

உலகக்கோப்பை கால்பந்து இறுதிப்போட்டி.. நாளை பள்ளி, கல்லூரிகள் விடுமுறை..

அடுத்த கட்டுரையில்
Show comments