உலகின் மிகச்சிறந்த கால்பந்து வீரன் நான்தான்… ரொனால்டோ தடாலடி!
போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகளவில் கவனம் பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவர். கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்துள்ள ரொனால்டோ, அதற்கு வெளியேயும் பல சாதனைகளைப் படைத்துள்ளார். அதிகமாக சம்பாதிக்கும் கால்பந்துவீரர்களில் ஒருவரான ரொனால்டோ, தற்போது இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்களைக் கொண்ட பிரபலமாகியுள்ளார். இன்ஸ்டாகிராமில் அதிக பாலோயர்கள் கொண்ட விளையாட்டு வீரர் என்ற சாதனையை அவரிடம்தான் உள்ளது.
கிளப் போட்டிகளில் கிட்டத்தட்ட அனைத்துக் கோப்பைகளையும் வென்றுவிட்டாலும், இன்னும் ரொனால்டோ கால்பந்து உலகக் கோப்பையை தனது அணிக்காக வெல்லவில்லை. தற்போது 38 வயதாகும் ரொனால்டோ சமீபத்தில் கால்பந்து போட்டிகளில் 900 கோல்கள் அடித்து புதிய சாதனையைப் படைத்தார்.
இந்நிலையில் ரொனால்டோ உலகின் தலைசிறந்த கால்பந்து வீரன் நான்தான் என்று பேசியுள்ளார். அதில் “ கால்பந்து வரலாற்றில் மிகச்சிறந்த வீரர் என்றால் அது நான்தான். சிலருக்கு மாரடோனா, மெஸ்ஸி, பீலே ஆகியோரை பிடிக்கலாம். அவர்களின் விருப்பத்தை நான் மதிக்கிறேன். ஆனால் கோல்களின் அடிப்படையில் என்னைவிடச் சிறந்த வீரர்கள் யாரும் இல்லை.” எனக் கூறியுள்ளார்.