டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை இப்படி நடத்தக் கூடாது… ரோஹித் ஷர்மா சொல்லும் ஐடியா!

திங்கள், 12 ஜூன் 2023 (07:43 IST)
இந்திய அணி இரண்டாவது முறையாகவும் இறுதிப் போட்டியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை இழந்துள்ளது. இது இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய அளவில் அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது.

வெல்வதற்கு அனைத்து வாய்ப்புகள் இருந்தும் அணித் தேர்வு உள்ளிட்ட சில விஷயங்களில் இந்திய அணி செய்த சிறு தவறுகளால் போட்டியைத் தோற்றதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. குறிப்பாக அணியில் அஸ்வினை எடுக்காதது குறித்து கேப்டன் மீதும் பயிற்சியாளர் மீதும் விமர்சனங்கள் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் போட்டி முடிந்ததும் பேசியுள்ள இந்திய கேப்டன் ரோஹித் ஷர்மா “டெஸ்ட் சாம்பியன் இறுதிப் போட்டியை ஒரே போட்டியாக நடத்தாமல், மூன்று போட்டிகள் கொண்ட தொடராக நடத்த வேண்டும். மேலும் இறுதிப் போட்டி எப்போதும் ஜூன் மாதத்தில் இங்கிலாந்தில் மட்டுமே நடக்கக் கூடாது” என இரு ஆலோசனைகளைக் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வி.. பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் கூறும் காரணம் என்ன தெரியுமா?

கேப்டன் ஆனார் திலக் வர்மா.. முத்தரப்பு தொடருக்கு இந்திய அணி அறிவிப்பு..

113 கோடி கொடுத்து பேட் கம்மின்ஸ் தக்கவைப்பு.. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிரடி..!

10 லட்ச ரூபாய்க்கு ஏலம் போன அர்ஜூன் டெண்டுல்கர்.. ஏலம் எடுத்த அணி எது?

நடுவரின் அவுட் தீர்ப்பு குறித்த சர்ச்சை.. விராத் கோலியின் ஆவேசத்தால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments