Daily Horoscope

ஏலத்தில் எந்த டீமுக்கு செல்லப் போகிறீர்கள்?... போட்டியின் நடுவே ரிஷப் பண்டிடம் கேள்வி கேட்ட ஆஸி பவுலர்!

Written By vinoth
Updated: வெள்ளி, 22 நவம்பர் 2024 (12:37 IST)
16 ஆவது பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடருக்காக இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள நிலையில், இன்று முதல் டெஸ்ட் போட்டி பெர்த் நகரில் தொடங்கியுள்ளது. இந்திய அணியின் கேப்டன் பும்ரா, டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்துள்ளார்.

இந்நிலையில் முதலில் பேட் செய்துவரும் இந்திய அணி 8 விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. இந்த போட்டியில் தடுமாறிய இந்திய அணியை ரிஷப் பண்ட் நிதானமாக விளையாடி சற்று நேரம் காப்பாற்றினார். பின்னர் அவரும் 37 ரன்களில் அவுட்டானார்.

இந்த போட்டியில் நாதன் லயன் மற்றும் ரிஷப் பண்ட் இடையே நடந்த ஒரு உரையாடல் கலகலப்பை ஏற்படுத்தியது. அந்த உரையாடலில் லயன் “ஐபில் ஏலத்தில் எந்த அணிக்கு செல்லப் போகிறீர்கள்?” எனக் கேட்க அதற்கு ரிஷப் பண்ட் சிரித்துக் கொண்டு “எந்த ஐடியாவும் இல்லை” எனக் கூறினார். அவர்களின் இந்த உரையாடல் ஸ்டம்ப் மைக் மூலமாக வெளியாகி ரசிகர்களிடம் சிரிப்பை வரவழைத்தது.
 

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments