சிஎஸ்கே என்னும் கப்பலில் ஏகப்பட்ட ஓட்டைகள்! – தோனி வேதனை!

ஞாயிறு, 11 அக்டோபர் 2020 (11:33 IST)
நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணியிடன் சிஎஸ்கே தோல்வியடைந்தது குறித்து மகேந்திர சிங் தோனி வேதனை தெரிவித்துள்ளார்.

நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸுடன் மோதிய தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 37 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 5 ஆட்டங்களில் தோல்வியடைந்து 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் ப்ளே ஆப்க்கு சிஎஸ்கே செல்லுமா என ரசிகர்களிடையே பதற்றம் எழுந்துள்ளது.

இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தின் தோல்வி குறித்து பேசியுள்ள சிஎஸ்கே அணி கேப்டன் தோனி “சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்னும் கப்பலில் ஏகப்பட்ட ஓட்டைகள் விழுந்துள்ளது. அதில் ஒரு ஓட்டையை அடைத்தால் மற்றொரு ஓட்டை உருவாகி விடுகிறது” என வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். 

எல்லாம் காட்டு

ரொனால்டோவின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது.. கடைசி நிமிடத்தில் கோல் அடித்து அசத்திய ஸ்பெயின்..

35 வருடங்களுக்கு பின் சீக்கிரம் வெளியேறிய பிரேசில் அணி.. விரக்தியில் ஓய்வு பெற்ற நெய்மார்...

அதிக சேம் சைடு கோல்கள்.. 2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மோசமான சாதனை..!

ஒரு பெருமைமிகு சாதனை.. ஒரு மோசமான சாதனை.. வைபவ் சூர்ய வன்ஷியின் அறிமுக போட்டியில் நடந்தது என்ன?

அயர்லாந்திடம் தோல்வி அடைந்தது இந்திய அணி.. தொடரையும் அயர்லாந்திடம் இழந்த சோகம்..

அடுத்த கட்டுரையில்
Show comments