முதல் விக்கெட்டை இழந்த பாகிஸ்தான்… சிராஜ் அற்புதம்!

சனி, 14 அக்டோபர் 2023 (14:48 IST)
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கோப்பை தொடர் லீக் போட்டி அகமதாபாத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் டாஸ் போடப்பட்ட நிலையில் டாஸ் வென்ற கேப்டன் ரோஹித் ஷர்மா முதலில் பந்துவீச முடிவு செய்தார்.

அதன்படி பேட் செய்ய வந்த பாகிஸ்ஹான் அணி முதலில் விக்கெட்களை விட்டுக்கொடுக்காமல் நிதானமாக விளையாடியது. கிடைக்கும் பந்துகளில் பவுண்டரிகளை விளாசி வந்தது. முகமது சிராஜ் ஓவரில் அப்படி சில பவுண்டரிகள் அடிக்கப்பட்டன.

இந்நிலையில் எட்டாவது ஓவரின் இறுதியில் சிராஜ் பாகிஸ்தானின் தொடக்க ஆட்டக்காரர் அப்துல்லா ஷபீக்கின் விக்கெட்டை எல் பி டபுள் யு முறையில் எடுத்தார். தற்போது பாகிஸ்தான் அணி 9 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் சேர்த்து விளையாடி வருகிறது.

எல்லாம் காட்டு

தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வி.. பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் கூறும் காரணம் என்ன தெரியுமா?

கேப்டன் ஆனார் திலக் வர்மா.. முத்தரப்பு தொடருக்கு இந்திய அணி அறிவிப்பு..

113 கோடி கொடுத்து பேட் கம்மின்ஸ் தக்கவைப்பு.. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிரடி..!

10 லட்ச ரூபாய்க்கு ஏலம் போன அர்ஜூன் டெண்டுல்கர்.. ஏலம் எடுத்த அணி எது?

நடுவரின் அவுட் தீர்ப்பு குறித்த சர்ச்சை.. விராத் கோலியின் ஆவேசத்தால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments