ஐதராபாத் மைதானத்தில் முகமது அசாரூதின் ஸ்டாண்ட் பெயர் மாற்றம்..!

vinoth
திங்கள், 21 ஏப்ரல் 2025 (17:38 IST)
இந்திய அணிக்கு மிக நீண்ட காலம் கேப்டனாக இருந்தவர்களில் ஒருவர் முகமது அசாரூதின். அதுமட்டுமில்லாமல் மூன்று உலகக் கோப்பைத் தொடர்ல்களில் கேப்டனாகவும் செயல்பட்டார். சச்சினுக்கு முன்பு இந்தியாவுக்காக ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்த வீரர் என்ற பெருமையும் அவருக்கு இருந்தது.

அதன் பின்னர் சூதாட்ட சர்ச்சைகளில் சிக்கி அவர் தன் புகழைக் கெடுத்துக் கொண்டார். ஓய்வு பெற்ற பின்னர் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்தார். இதற்கிடையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவராக முகமது அசாருதீன் தேர்வானார். தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் அசாருதீனுக்கு 173 வாக்கு களும், அவரை எதிர்த்து போட்டி யிட்ட பிரகாஷ் சந்த் ஜெயினுக்கு 73 வாக்குகளும் கிடைத்தன.

அப்போது அவரது பதவிக் காலத்தில் ஐதராபாத் மைதானத்தில் இருந்து விவிஎஸ் லக்‌ஷ்மன் பெயரிலான ஸ்டாண்ட்டை முகமது அசாரூதின் ஸ்டாண்ட் என்று பெயர் மாற்றப்பட்டது. அதற்கு எதிராக நடந்த வழக்கில் இப்போது அந்த பெயர் மாற்றம் அதிகாரத் துஷ்பிரயோகம் என தீர்ப்பளிகப்பட்டு, தற்போது மீண்டும் விவிஎஸ் லஷ்மன் ஸ்டாண்ட் என்ற பெயரே மீண்டும் மாற்றப்படவுள்ளது.

எல்லாம் காட்டு

டிராவிட் ஹெட் மனைவிக்கு மிரட்டல் விடுத்த ஐபிஎல் ரசிகர்கள்...! அநாகரீகமான முறையில் விராத் ரசிகர்கள்?

வைபவ் மனது வைத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு ராஜஸ்தான் செல்ல வாய்ப்பு.. இன்று மும்பையுடன் மோதல்..!

சிஎஸ்கே படுதோல்வி.. பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோனது.. அடுத்த சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை எவை?

சிஎஸ்கேவுக்கு இன்று கடைசி லீக் போட்டி.. ஜெயித்தாலும் பிளே ஆஃப் செல்ல முடியுமா?

வைபவ் சூர்யவன்ஷியின் வரலாற்றுச் சாதனை: கிரிக்கெட் உலகமே வியப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments