Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒரே நாளில் முதல் இடத்தை இழந்த ராஜஸ்தான்: 2வது இடத்திற்கு முன்னேறிய கொல்கத்தா!

Written By siva
Updated: வியாழன், 1 அக்டோபர் 2020 (08:53 IST)
ஒரே நாளில் முதல் இடத்தை இழந்த ராஜஸ்தான்:
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் பஞ்சாப் அணி கொடுத்த இமாலய இலக்கான 224 என்ற இலக்கை எளிதில் எட்ட முடிந்த ராஜஸ்தான் அணியால் நேற்று கொல்கத்தா அணி கொடுத்த 175 என்ற இலக்கை எட்ட முடியாமல் 37 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதனால் நேற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ராஜஸ்தான் அணி இன்று திடீரென மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. மீண்டும் டெல்லி அணி முதலிடத்தை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏழாவது இடத்தில் இருந்த நிலையில் அடுத்தடுத்து பெற்ற வெற்றிகள் காரணமாக தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
நேற்று முதல் இடத்தில் இருந்த ராஜஸ்தான் ராயல் நேற்றைய தோல்வி காரணமாக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. பெங்களூர், பஞ்சாப், மும்பை, ஹைதராபாத், மற்றும் சென்னை அணிகள் 4 முதல் 8வது இடங்களில் புள்ளிகள் பட்டியலில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

எல்லாம் காட்டு

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர்.. செப் 13 இறுதி போட்டியில் இந்தியாவுடன் மோதுவது பாகிஸ்தானா?

அடுத்த கட்டுரையில்
Show comments