மூன்றாவது ஆஷஸ் போட்டியில் ஆண்டர்சனை நீக்கிய இங்கிலாந்து!

வியாழன், 6 ஜூலை 2023 (08:03 IST)
சமீபத்தில் நடந்து முடிந்த ஆஷஸ் தொடரின் இரண்டாவது போட்டியில்  ஆஸி அணி வென்றது. இதன் மூலம் தொடரில் ஆஸி அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இந்நிலையில் எப்படியாவது மூன்றாவது போட்டியை வென்று தொடரில் வெற்றிக் கணக்கை தொடங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது இங்கிலாந்து அணி.

இந்நிலையில் இன்று மூன்றாவது ஆஷஸ் போட்டி ஹெட்டிங்லியில் நடக்க உள்ளது. மதியம் 3.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டிக்கான ப்ளேயிங் லெவன் அணியை நேற்றே அறிவித்தது இங்கிலாந்து. அதில் அந்த அணியின் மூத்த பவுலர் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இடமளிக்கப்படவில்லை. மற்றொரு வீரரான ஜோஷ் டங்கும் நீக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2 டெஸ்ட் போட்டிகளிலும் மொத்தமாக 77 ஓவர்கள் வீசிய ஆண்டர்சன் மூன்று விக்கெட்கள் மட்டுமே வீழ்த்தினார். அதனால் அவருக்கு இந்த டெஸ்ட்டில் ஓய்வளிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

எல்லாம் காட்டு

29 பந்தில் 97 ரன்கள்.. ஐதராபாத்தை அடித்து நொறுக்கிய வைபவ் சூர்யவன்ஷி... இறுதிக்கு தகுதி பெறுமா ராஜஸ்தான்?

80% மழைக்கு வாய்ப்பு.. இன்றைய போட்டி மழையால் ரத்தானால் இறுதிப்போட்டிக்கு செல்லும் அணி எது? எந்த அணிக்கு அதிர்ச்சி?

டிராவிட் ஹெட் மனைவிக்கு மிரட்டல் விடுத்த ஐபிஎல் ரசிகர்கள்...! அநாகரீகமான முறையில் விராத் ரசிகர்கள்?

வைபவ் மனது வைத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு ராஜஸ்தான் செல்ல வாய்ப்பு.. இன்று மும்பையுடன் மோதல்..!

சிஎஸ்கே படுதோல்வி.. பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோனது.. அடுத்த சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments