நடுவரிசைக்காக போட்டிபோடும் 5 வீரர்கள்: இந்திய அணி எப்படி இருக்கும்?

சனி, 1 செப்டம்பர் 2018 (12:44 IST)
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்று மூலம் தேர்வாகும் அணி என 6 அணிகள் பங்கேற்கும் ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டி செப்டம்பர் 15 ஆம் தேதி துவங்குகிறது.
 
இந்த போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணி நாளை தேர்வு செய்யப்பட உள்ளது. ஆகியக்கோப்பை போட்டியில் இருந்து விராட் கோலிக்கு நிச்சயம் ஓய்வு அளிக்கப்படலாம் என தெரிகிறது. 
 
கோலிக்கு ஓய்வு அளித்தால் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார். ரோகித் சர்மா, ஷிகர் தவண் இயல்பாகவே அணிக்குள் வந்துவிடுவார்கள். அணியின் மற்றொரு தொடக்க வீரருக்காக கே.எல்.ராகுல் தேர்வு செய்யப்படலாம்.
 
இந்நிலையில், நடுவரிசையில் இடம் பிடிப்பதற்காக 5 வீரர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. மயங்க் அகர்வால், மணீஷ் பாண்டே, அம்பதி ராயுடு, ஜாதவ், குர்னல் பாண்டியா, தினேஷ் கார்த்திக் ஆகியோர் தீவிரமாக பரிசீலிக்கப்படுவார்கள். 
 
புவனேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா, உமேஷ் யாதவ் ஆகியோருடன் சேர்ந்து ஷர்துல் தாக்கூர், சித்தார்த் கவுல் பெயர் ஆலோசிக்கப்படலாம். தீபக் சாஹருக்கு வாய்ப்பிருக்கும் என தெரிகிறது.
 
விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக தோனியும், மாற்று கீப்பராக ரிஷாப் பந்த்துக்கும் வாய்ப்பு கிடைக்கலாம் என யூகிக்கப்படுகிறது. 

எல்லாம் காட்டு

சிஎஸ்கே படுதோல்வி.. பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோனது.. அடுத்த சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை எவை?

சிஎஸ்கேவுக்கு இன்று கடைசி லீக் போட்டி.. ஜெயித்தாலும் பிளே ஆஃப் செல்ல முடியுமா?

வைபவ் சூர்யவன்ஷியின் வரலாற்றுச் சாதனை: கிரிக்கெட் உலகமே வியப்பு!

முதல்முறையாக சென்னையில் ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற பிக் பாஷ் டி20 லீக் போட்டி.. கிரிக்கெட் ரசிகர்கள் குஷி..!

தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வி.. பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் கூறும் காரணம் என்ன தெரியுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments