3 விக்கெட்களை இழந்தாலும் அதிரடி காட்டும் இந்திய பேட்ஸ்மேன்கள்!

வெள்ளி, 23 ஜூலை 2021 (17:07 IST)
இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்றாவது போட்டியில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் அதிரடியாக விளையாடி வருகின்றனர்.

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையே இன்று நடைபெற உள்ள 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் செய்ய முடிவு  செய்து ஆடி வருகிறது. இந்த போட்டியில் இந்திய அணியில் 5 மாற்றங்கள் செய்யப்பட்டு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில் முதலில் பேட்டிங்  இறங்கிய இந்திய் அணி ஓவருக்கு 6 ரன்களுக்கு மேல் சேர்த்து விளையாடி வருகிறது.

தொடக்க ஆட்டக்காரர்களான ஷிகார் தவான் 13 ரன்களிலும் பிருத்வி ஷா 49 ரன்களிலும் ஆட்டமிழக்க, அடுத்த வந்த சஞ்சு சாம்சன் 46 ரன்கள் சேர்த்தார். இந்நிலையில் தற்போது மனிஷ் பாண்டே 10 ரன்களுடனும் சூர்யகுமார் யாதவ் 22 ரன்களுடனும் களத்தில் நின்று விளையாடி வருகின்றனர். 23 ஓவர்கள் முடிவில் இந்தியா 147 ரன்கள் சேர்த்துள்ளது.
  

எல்லாம் காட்டு

தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வி.. பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் கூறும் காரணம் என்ன தெரியுமா?

கேப்டன் ஆனார் திலக் வர்மா.. முத்தரப்பு தொடருக்கு இந்திய அணி அறிவிப்பு..

113 கோடி கொடுத்து பேட் கம்மின்ஸ் தக்கவைப்பு.. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் அதிரடி..!

10 லட்ச ரூபாய்க்கு ஏலம் போன அர்ஜூன் டெண்டுல்கர்.. ஏலம் எடுத்த அணி எது?

நடுவரின் அவுட் தீர்ப்பு குறித்த சர்ச்சை.. விராத் கோலியின் ஆவேசத்தால் பரபரப்பு..!

அடுத்த கட்டுரையில்
Show comments