செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 23 ஜூலை 2021 (15:48 IST)

மகாராஷ்டிரா கனமழையால் திடீர் நிலச்சரிவு; 36 பேர் உயிரிழந்ததாக தகவல்!

மகாராஷ்டிராவில் கனமழை பெய்து வரும் நிலையில் திடீரென ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வட மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல இடங்களில் மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மகாராஷ்டிராவிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. ராய்காட் மாவட்டத்தில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் சிக்கியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலச்சரிவால் 36 பேர் உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில் 30க்கும் மேற்பட்டவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.