ஞாயிறு, 23 பிப்ரவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 23 பிப்ரவரி 2025 (10:55 IST)

பாகிஸ்தான் அணியில் ஒற்றுமை இல்லை…ஹர்பஜன் சிங் தடாலடி கருத்து!

சமீபகாலமாக பாகிஸ்தான் அணி சர்வதேசக் கிரிக்கெட்டில் எந்த பெரிய சாதனையையும் படைக்கவில்லை. மிக மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகின்றது. அந்த அணியில் பல குழப்பங்கள் குளறுபடிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் தற்போது சாம்பியன்ஸ் கோப்பை தொடரை அந்நாட்டு வாரியம் நடத்துகிறது. இந்த தொடரை எப்படியாவது வெல்லவேண்டும் என்ற ஆவல் அந்நாட்டு ரசிகர்களிடம் மேலெழுந்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் தங்கள் முதல் போட்டியிலேயே நியுசிலாந்து அணியிடம் மண்ணைக் கவ்வியது. இன்று இந்திய அணியை எதிர்கொள்கிறது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் ஹர்பஜன் சிங் பாகிஸ்தான் அணி பற்றி விமர்சனங்களை வைத்துள்ளார். அதில் “நாங்கள் எப்போதும் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடும்போது அவர்கள் எங்களை வென்று விடுவார்களோ, என்ற அச்சம் இருக்கும். ஏனென்றால் அப்போது நிறைய மேட்ச் வின்னர்கள் அந்த அணியில் இருந்தார்கள். ஆனால் தற்போதைய அணியில் அப்படிப்பட்ட வீரர்கள் இருந்தாலும், அணிக்குள் ஒற்றுமை இருப்பது போல எனக்குத் தோன்றவில்லை” எனக் கூறியுள்ளார்.