’பீல்டிங் நிக்கும்போது என்ன கவனி… இல்லன்னா வெளிய போயிடு’ – இளம் வீரரிடம் கோபத்தைக் காட்டிய தோனி!

vinoth
சனி, 20 ஏப்ரல் 2024 (07:38 IST)
ஐபிஎல் 2024 சீசன் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் சி எஸ் கே  அணி மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த சீசனில் தோனி எட்டாவது வீரராக களமிறங்கிய அதிரடியாக விளையாடி வருகிறார். தற்போது 42 வயதாகும் தோனி இந்த சீசனின் வயதான கேப்டனாக உள்ளார். இந்நிலையில் இந்த சீசனோடு அவர் ஓய்வு பெற்றுவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சீசன் வரை கேப்டனாக செயல்பட்ட தோனி இந்த ஆண்டு வெறும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக மட்டும் செயல்படுகிறார். ஆனாலும் களத்தில் அவர் ஒரு கேப்டன் போலவே ஃபீல்ட் செட்டப் செய்கிறார். ருத்துராஜைப் போலவே வீரர்கள் அவரையும் கவனித்து வருகின்றனர்.

இந்நிலையில் சி எஸ் கே அணியில் தோனி தலைமையில் விளையாடிய நாராயண் ஜெகதீசன் தோனியைப் பற்றி ஒரு கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில் “ஆர் சி பி அணிக்கு எதிரான ஒரு போட்டியில் நான் கோலி விளையாடுவதையே பார்த்துக் கொண்டிருந்தேன். அதனால் தோனி என்னை பீல்டிங் மாற சொன்னதை நான் கவனிக்கவில்லை. அதனால் கடுப்பான தோனி ஓவர் முடிந்த போது ”ஒழுங்கா என்ன கவனி… இல்லையா நீ வெளிய போயிடு” எனக் கூறினார்” என தெரிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

அணியில் இருந்து நீக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ்.. மீண்டும் திரும்ப வேண்டுமானால் கடுமையான நிபந்தனைகள்....

சிஎஸ்கே அணியில் இருந்து திடீரென விலகிய ஸ்டீபன் பிளமிங்.. என்ன காரணம்?

இந்தியாவின் தொடர் தோல்வி.. 4வது டி20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.. கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்...

கிரிக்கெட் மேட்ச்!.. ஆணுறை விளம்பரங்களை தடை பண்ணுங்க!.. வலுக்கும் கோரிக்கை!...

ரொனால்டோவின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது.. கடைசி நிமிடத்தில் கோல் அடித்து அசத்திய ஸ்பெயின்..

அடுத்த கட்டுரையில்
Show comments