ஐபிஎல் தொடருக்கான பயிற்சியில் இறங்கிய தோனி… குஷியான ரசிகர்கள்!

வெள்ளி, 20 ஜனவரி 2023 (12:24 IST)
சிஎஸ்கே அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஜடேஜா விலகியதை அடுத்து கடந்த ஆண்டு சி எஸ் கே அணியை இறுதி போட்டிகளில் தோனி வழிநடத்தினார். ஆனால் அப்போதும் அணியால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியவில்லை.இதனால் ஜடேஜா அதிருப்தியில் இருந்ததாகவும், அவர் சிஎஸ்கே அணியில் இருந்து விலகுவார் என்று கூறப்பட்டது. மேலும் அவரது சமூக வலைத்தளத்தில் சிஎஸ்கே சம்பந்தப்பட்ட பதிவுகள் அனைத்தும் டெலிட் செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் அவர் இந்த ஆண்டும் சி எஸ் கே அணிக்காகதான் விளையாட உள்ளார்.

சமீபத்தில் ஐபிஎல் மினி ஏலம் முடிவடைந்த நிலையில் சென்னை அணியில் பென் ஸ்டோக்ஸ் உள்ளிட்ட வீரர்கள் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டோடு தோனி ஐபிஎல் தொடரில் இருந்தும் விடைபெறுவார் என நம்பப்படுகிறது.

அதனால் வெற்றியோடு இந்த சீசனை முடிக்க சென்னை அணி ஆர்வமாக இருக்கும். இந்நிலையில் தற்போது சென்னை அணி வீரர்களான ஜடேஜா மற்றும் தோனி ஆகியோர் பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்துள்ளனர்.

எல்லாம் காட்டு

முதல் ஓவரில் 3 விக்கெட், மெய்டன்.. இந்த ஓவரை வைபவ் சூர்யவன்ஷி சந்தித்து இருந்தால் என்ன நடந்திருக்கும்?

அணி உரிமையாளர்களுக்கு கிரிக்கெட் பற்றி என்ன தெரியும்? சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் கேட்ட கேள்வி...

சூர்யகுமார் யாதவ் பதவி அவுட்.. கேப்டன் ஆனார் ஸ்ரேயாஸ் ஐயர்.. அதிரடி தொடருமா?

இந்திய அணியில் வைபவ் சூர்யவன்ஷி? ஹிண்ட் கொடுத்த பிசிசிஐ செயலாளர்

29 பந்தில் 97 ரன்கள்.. ஐதராபாத்தை அடித்து நொறுக்கிய வைபவ் சூர்யவன்ஷி... இறுதிக்கு தகுதி பெறுமா ராஜஸ்தான்?

அடுத்த கட்டுரையில்
Show comments