Webdunia - Bharat's app for daily news and videos

Install App

என் பவுலிங்குக்கே எனக்கு ஃபீல்ட் செட் செய்யத் தெரியாது – பும்ரா ஓபன் டாக்!

Written By vinoth
Updated: வெள்ளி, 26 ஜூலை 2024 (07:50 IST)
கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியின் பவுலிங் யூனிட்டின் முதுகெலும்பாக பும்ரா இருந்து வருகிறார். டெஸ்ட், டி 20 மற்றும் ஒருநாள் என மூன்று வகையான போட்டிகளிலும் இப்போது இருக்கும் வேகப்பந்துவீச்சாளர்களில் பும்ராதான் நம்பர் 1 பவுலர் என்று சந்தேகத்துக்கு இடமில்லாமல் சொல்லலாம்.

நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தவர் ஜாஸ்ப்ரீத் பும்ரா. அனைத்து போட்டிகளிலும் சிறப்பான பவுலிங்கின் மூலம் அணிக்கு வெற்றியை தேடித்தந்த அவர் தொடர் நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார். இந்த தொடரில் ஒரு ரன் கூட சேர்க்காமல் அவர் தொடர் நாயகன் விருது பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் எதிர்காலத்தில் இந்திய அணிக்குக் கேப்டனாக வரலாம் என ஊகங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் இப்போது அவர் அளித்துள்ள ஒரு நேர்காணலில் “முதலில் எனக்கு ஆடுகளத்தில் ஃபீல்ட் செட் செய்யவே தெரியாது. மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வந்தபோது கூட, ரோஹித் ஷர்மாவிடம் சென்று என்ன மாதிரியான பந்து வீசப்போகிறேன் என சொல்லிவிட்டு, நீங்களே ஃபீல்ட் செட் செய்துவிடுங்கள். எனக்கு அதெல்லாம் எதுவும் தெரியாது என்று சொல்லிவிடுவேன். ஆனால் அதன் பிறகுதான் தெரிந்தது. கிரிக்கெட்டில் நாம் எல்லாவற்றுக்கும் பிறரை நம்பியிருக்கக் கூடாது என்று. பின்னர்தான் எனக்கான ஃபீல்ட் செட்டை அமைக்கக் கற்றுக்கொண்டேன்.” எனப் பேசியுள்ளார்.

எல்லாம் காட்டு

கொழும்பு டெஸ்ட் போட்டியில் முக்கிய சாதனை செய்த சுப்மன் கில்.. குவியும் வாழ்த்துக்கள்..

டெஸ்ட் போட்டிக்கு தேற மாட்டாரா வைபவ் சூர்யன்வன்ஷி.. 6 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து அவுட்..

2027 உலக கோப்பை.. முன்னாள் வீரர் உத்தப்பாவின் கனவு அணியில் வைபவ் சூர்யவன்ஷி..

முதலாவது டெஸ்ட் போட்டி: இலங்கை அணியை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி..!

2வது இன்னிங்ஸில் சொதப்பிய இந்திய அணி.. இலங்கைக்கு இலக்கு எவ்வளவு ரன்கள்?

அடுத்த கட்டுரையில்
Show comments