Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ பாஸ் நடைமுறைகள் எளிமைப் படுத்தப்படும் – முதல்வர் உறுதி!

Updated: வியாழன், 6 ஆகஸ்ட் 2020 (15:40 IST)
தமிழகத்தில் இ பாஸ் வழங்கும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உறுதி அளித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்புகளை கருத்தில் கொண்டு ஆகஸ்டு இறுதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. அதனால் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டுள்ளது. மாவட்டங்களுக்குள்ளாக பயணிக்க உள்ளவர்கள் முன்னதாக இ-பாஸ் பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மக்கள் பலர் அவசர பயணங்களுக்காக இ-பாஸ் விண்ணப்பித்தும் கிடைக்காததால் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். மறுபுறம் இ-பாஸ் பெற்றுத்தர ஆயிரக்கணக்கில் பணம் வசூல் செய்யும் இடைத்தரகர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது. இதனால் ஈ பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என தமிழக எதிர்க்கட்சி தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது சம்மந்தமாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிச்சாமி ‘தொழிலாளர்களுக்கான இ பாஸ் மாதம் ஒருமுறை மட்டும் புதுப்பிக்கப்பட்டால் போதும். அதுபோல வெளி மாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்களை தாராளமாக அழைத்து வரலாம். மேலும் இ பாஸ் எடுக்கும் நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும்’ என அறிவித்துள்ளார்.
 

எல்லாம் காட்டு

ரூ.60 கோடி பட்ஜெட்!.. ரூ.4780 கோடி வசூல்!. சாதனை படைத்த அப்செஷன்!...

காத்து வாங்கும் அட்வான்ஸ் புக்கிங்!. தமிழ்நாட்டில் கல்லா கட்டுமா டாக்ஸிக்!..

நயன்தாராவிடம் ஏற்பட்ட மாற்றம்!.. இன்ப அதிர்ச்சியில் திரையுலகம்!..

நல்லவேளை நீங்க LIK படத்தில் நடிக்கல!.. கியாராவை சிரிக்க வைத்த விக்னேஷ் சிவன்!. (வீடியோ)!..

விஜய் ரொம்ப லக்கி!.. எல்லாரும் கத்துக்கணும்!.. டாக்சிக் விழாவில் நடிகர் யஷ் பேச்சு!...

அடுத்த கட்டுரையில்
Show comments