பேஸ்புக் அறிமுகம் செய்யும் லிப்ரா டிஜிட்டல் பணம் பற்றி தெரியுமா?

புதன், 19 ஜூன் 2019 (12:10 IST)
சமூக வலைத்தளமான பேஸ்புக் லிப்ரா என பெயரிடப்பட்டுள்ள டிஜிட்டல் கரன்சியை அறிமுகம் செய்ய உள்ளது. 
 
லிப்ரா எனும் டிஜிட்டல் கரன்சியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள ஃபேஸ்புக் நிறுவனம், குறுஞ்செய்தி அனுப்பவது எவ்வளவு சுலபமோ, அந்த அளவுக்கு பணத்தை சேமிப்பது, அனுப்பவது மற்றும் செலவு செய்வதை இது சுலபமாக்கும் என தெரிவித்துள்ளது. 
 
ஒரு ஸ்மார்ட் ஃபோனும் அதில் இணைய வசதியும் இருந்தால் போதும் பணத்தை சேமிப்பது, அனுப்பவது மற்றும் செலவு செய்வது மிகவும் எளிமை எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
உலகெங்கும் வங்கி கணக்கு இல்லாத 170 கோடி மக்கள் மற்றும் அவர்கள் பணப்பரிமாற்றம் மேற்கொள்ள, செய்யும் செலவுகள் ஆகியவை பற்றி இந்த திட்டம் பற்றிய அறிக்கையில் ஃபேஸ்புக் விவரித்துள்ளது.
 
மேலும், இந்த டிஜிட்டல் பணத்தின் பரிமாற்றத்துக்கு சிறிய அளவிலான கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லாம் காட்டு

ஆட்சிக்கு ஆதரவாக திரையுலகினரை வைத்து விளம்பரம்!.. தவெக போடும் ஸ்கெட்ச்!..

பெண்கள் அந்தரங்க வீடியோ!.. நாகர்கோவில் காசிக்கு வாழ்நாள் சிறை உறுதி!..

கல்யாணத்தை நிறுத்த மொட்டையா?!.. இளம்பெண்ணை திட்டி தீர்த்த நெட்டிசன்ஸ்!.. வீடியோ உள்ளே

விசாரணைக்கு வரேன்!. ஆனா அரெஸ்ட் பண்ணக்கூடாது!.. காவல்துறைக்கு செந்தில் பாலாஜி கடிதம்!..

ஜூலை 17 முதல் மக்கள் தொகை கணக்கெடுப்பு.. ஆன்லைன் மூலமே நாமே பதிவு செய்யலாம்.. முழு விவரங்கள்..

அடுத்த கட்டுரையில்
Show comments